பக்கம் எண் :

பெரியபுராணம்223

     விரி;- 3938. (இ-ள்) தேனும்.....தீர்க்க - தேனும் புல்லாங்குழலும் என்றிவற்றினை
வென்ற இனிமையுடைய திருமொழியினையுடைய பரவையாரது ஊடலைத் தீர்க்கும்
பொருட்டு; மதி.......தூதுதரும் திருநாள் - மதியும் பாம்பும் பகை தீர்க்க வைத்தற்
கிடமாகிய சடையினையுடைய பெருமான் தூது தந்த திருநாளிலே;
கூனும்......மலர்ப்பாதம் - கூனனது கூனையும் குருடனது குருட்டுத் தன்மையினையும்
தீர்த்துப் பணி கொள்வாராகிய நம்பியாரூரது விளக்கமிக்க மலர்போன்ற பாதங்களை;
யானும்.....கூன் - யானும் துதித்து ஏழுவகைப் பிறப்பினும் உட்பட்டு முடங்கிக்கிடக்கும்
தன்மையாகிய கூன்தன்மையினையும், அவற்றினுட் செலுத்தும் அறியாமையாகிய
குருட்டுத் தன்மையினையும் தீர்த்துக் கொள்கின்றேன்.
 

     (வி-ரை) தேனும்....மொழி - “குழலினிது யாழினி தென்ப” (குறள்) என்றவாறு
மொழியின் இனிமைக்கு ஓசையால் இனிய குழலும், சுவையால் இனிய தேனும்
உவமையாயின; மொழியாள் - பரவையார்; மொழியாளுடைய என ஆறனுருபு விரிக்க.
பிழைத்த - வென்ற என்ற பொருளில் வந்தது.
 

     புலவி தீர்க்கச் சடையார் தூதுதரும் திருநாள் - இவ்வரலாறு முன்னர் 3467
- 3528) உரைக்கப்பட்டது. மொழியாள் - சங்கிலியார் என்று கொண்டு அவர்
காரணமாக வந்த புலவி என்றலுமாம். திரு - சிறந்த.
 

     மதி....சடையார் - பகை (புலவி) தீர்த்தலே இவரது தொழிலாதலின் புலவி
தீர்த்தற்குரியார் என்பது குறிப்பு. பணி - பாம்பு.
 

     தூது தரும் - தூது செல்லுதனால் புலவி தீர்க்கும் தன்மையினைத் தந்த; தருதல்
- ஈண்டு விளைத்தல் என்க.
 

     திருநாள் - “திருவாரூர் ஒரு வீதியிலே சிவலோக முழுதுங் காண வுளதாம்” படி
திருஉலாப் போந்து நடந்தமையால் அது திருவிழாச் சிறப்புடைய நாளாயிற்று என்பது.
 
     கூறும்...கொள்வார் - இது இறைவர் தூது சென்றருளிய நாளில் நிகழ்ந்ததோர்
அருட்செயல். இவ்வரலாறும் காரணமும், முன் வகைநூலுள் வகுக்கப்பட்டன; அது
நிகழ்ந்த நாளும், பிறவும் ஈண்டு விரிநூலுள் விரிக்கப்பட்டன; அஃதாவது இரண்டாம்
முறை தூதுசென்று மீண்டு, இறைவர் “தாழ்குழல் செற்றம் தணிவித்தோம்; நம்பி யினிப்
போய் மற்றவ டன்பா னணுகொன்ன” (3526) என்று அருளியபின், தேவாசிரிய
மண்டபத்தினின்றும் நம்பிகள் பரவையாரது திருமாளிகையில் எழுந்தருளினர்.
அப்பொழுது, முன் துயிலுணர்ந்த பரிசனங்கள் அங்கங்கு நின்றும் வந்து மருங்கு
மொய்த்தனர்; மாலை, தண்சாந்து, முதலியவற்றை ஏந்திப் பரிசனங்கள்
செல்லவேண்டிநின்றபோது அங்குக் குழுமிய பரிசனங்களுள் ஒரு கூனனும் குருடனும்
ஏவப்பெற்றனர். அவ்விருவரும் தத்தமது உடற்குறையினாற் ஏந்திச் செல்ல
மாட்டாமையை விண்ணப்பிக்க, நம்பிகளது அருளினால் முறையே கூனும் குருடும்
தீர்க்கப்பெற்று ஏவல் கொள்ளப்பெற்று உய்ந்தனர் என்பதாம். (3526 - 3530 - 3531
பார்க்க) திருக்கோயிலின் மருங்கிலும், மண்டபங்களிலும், கூன் குருடு முதலிய உடற்
குறைபாடுடையோர் தங்கி, ஐயமேற்றுண்டு வாழும் வழக்கு இன்றும் உண்டாதலும்
இங்கு நினைவுகூர்தற்பாலது. இவ்வாறன்றி, இவ்வரலாற்றைப் பரவையார்
நம்பிகளுக்கு மாலையும் அடைக்காயும் கொடுத்து வந்தனர் என்றும், அவர்கள், புலவி
தீர்க்க இறைவர் தூதுசென்ற அந்நாளில் கூனும் குருடும் நம்பிகளால் தீர்த்தருளப்
பெற்றனர் என்றும் உரைத்தனர் முன் உரைகாரர்கள். பரவையாரது திருமாளிகை