உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
42. நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “மெய்யடியா னரசிங்க முனையரையர்க் கடியேன்” | |
-திருத்தொண்டத்தொகை - (7) |
மெய்யடியர் - மெய்யடியன் - என்பனவும் பாடபேதங்கள். |
வகை |
| புகழும் படியெம் பரமே? தவர்க்குநற் பொன்னிடுவோன் இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும் நிகழும் படிகண் டவற்கன் றிரட்டிபொன் னிட்டவனி திகழு முடிநர சிங்க முனையர சன்றிறமே” | |
-திருத்தொண்டர் திருவந்தாதி - (51) |
விரி |
3983. | கோடாத நெறிவிளங்குங் குடிமரபி னரசளித்து மாடாக மணிகண்டர் திருநீறே மனங்கொள்வார் தேடாத பெருவளத்திற் சிறந்ததிரு முனைப்பாடி நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர். 1 |
புராணம்: நரசிங்க முனையரைய நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், எட்டாவது பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கத்துள் மூன்றாவது நரசிங்க முனையரையர் புராணங் கூறத் தொடங்குகின்றார். |
தொகை: மெய்யடியாராகிய நரசிங்கமுனையரையர் என்னும் திருத்தொண்டர்க்கு நான் அடியேன். மெய்யடியான் - மெய் - இயற்கையடைமொழி. “வாய்மைச், சால்பின்மிக் குயர்திரு தொண்டினுண் மைத்திறந் தன்னையேதெளிய நாடி” (2421) என்றபடி திருத்தொண்டின் அடிமைத் திறமானது திருவேடத்தின் உண்மையில் வைத்த உறைப்புடைமையேயாம்; பிறிதன்று; என்ற நிலையே மெய்யடிமையாவது என்பது இவர் சரிதக் குறிப்பென்றதாம். பெயரும் பண்பும் தொகைநூல் உணர்த்தியபடி. |
வகை: தவர்க்கு நற்பொன் இடுவோன் - அடியார்களுக்கு (ஆதிரை நாடோறும்) நற்பொன் தருபவர் (அந்நிலையில் ஒரு ஆதிரை நாளில்); இகழும்படி.....கண்டு - இகழ்ச்சி பெறும்படி ஒரு அடியார் பெண்களாற் புனையப் பெற்ற காமக் |