| மனங்கொள்வார் - காவலனார் நரசிங்கமுனையரையர் என்று கூட்டுக. முனையதரையர் என்பது முனையரையர் என வந்தது. இது பற்றி முன் (467) உரைத்தவை பார்க்க. இதனால் நாட்டுச் சிறப்பும், அரசமரபுச் சிறப்பும், அரசர் பெயரும், பண்பும் கூறப்பட்டன. |
| மாடாத - குலமரபில் - என்பனவும் பாடங்கள். மாடாத - மாளாத. 1 |
| 3984. | இம்முனையர் பெருந்தகையா ரிருந்தரசு புரந்துபோய்த் தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல மும்முனைநீ ளிலைச்சூல முதற்படையார் தொண்டுபுரி அம்முனைவ ரடியடைவே யரும்பெரும்பே றெனவடைவார், 2 |
| 3985. | சினவிடையார் கோயிறொறுந் திருச்செல்வம் பெருக்குநெறி அனவிடையா ருயிர்துறக்க வருமெனினு மவைகாத்து மனவிடையா மைத்தொடைய லணிமார்பர் வழித்தொண்டு கனவிடையா கிலும்வழுவாக் கடனாற்றிச் செல்கின்றார். 3 |
| 3986. | ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநா டொறுமென்றும் வேறுநிறை வழிபாடு விளங்கியபூ சனைமேவி நீறணியுந் தொண்டரணைந் தார்க்கெல்லா நிகழ்பசும்பொன் நூறுகுறை யாமலளித் தின்னமுது நுகர்விப்பார், 4 |
| 3987. | ஆனசெயன் முறைபுரிவா ரொருதிருவா திரைநாளில் மேன்மைநெறித் தொண்டர்க்கு விளங்கியபொன் னிடும்பொழுதின் மானநிலை யழிதன்மை வருங்காமக் குறிமலர்ந்த ஊனநிகழ் மேனியரா யொருவர்நீ றணிந்தணைந்தார். 5 |
| 3984. (இ-ள்) இம்முனையர் பெருந்தகையார்...அகல - இந்த முனையர் மரபின் பெருந்தகையாராகிய அரசர் தமது நகரிலிருந்து அரசளித்துப், பகைவர்களின் போர்கள் பலவற்றையும் வென்று, தீமையாகிய நெறிகளின் செயல்கள் எல்லாம் நீங்க; மும்முனை நீள்.....அடைவார் - மூன்று முனைகளையுடைய நீண்ட இலைவடிவினைதாகிய சூலமாகிய முதன்மை பெற்ற படையினை ஏந்திய இறைவரது திருத்தொண்டு புரிகின்ற அந்த முதல்வர்களாகும் அடியவர்களின் திருவடிகளை அடைவதுவே அரிய பெரிய பேறு என்று அடைவாராய், 2 |
| 3985. (இ-ள்) சினவிடையார்.....நெறியன இடை - சினம் பொருந்திய விடையினையுடைய இறைவரது திருக்கோயில்கள் தோறும் திருச்செல்வங்களைப் பெருகச் செய்யும் நெறியாகியவற்றின்கண்; ஆருயிர்...காத்து - அரிய உயிரை விடவந்தாலும் அந்நெறிகளைக் காவல் புரிந்து; மனவிடை....வழித்தொண்டு - மனவு மணிவடங்களினிடையே ஆமையோட்டை அணிந்த மார்பினையுடைய இறைவரது வழித்தொண்டினை; கனவிடையாகிலும்......செல்கின்றார் - கனவிலேயும் பிறழாது கடமைபூண்டு செய்துவருகின்றாராகி; 3 |
3986. (இ-ள்) ஆறணிந்த....மேவி - கங்கையாற்றினைத் தரித்த சடையினையுடையமுடியாராகிய சிவபெருமானுக்குத் திரு ஆதிரை நாள்தோறும் நித்தியமாக |