பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்274

     5. சிவன்கோயிற் றிருச்செல்வங்களைக் காத்தலில் உயிர்துறப்போர்
சிவனுலகிருப்பர்; உயிர்கொடுத்தும் சிவதருமம் காத்தற்குரியதென்பது சிவாகமவிதி
 

     6. திருவாதிரைநாள் சிவனுக்குகந்த சிறப்புடைய திருநாள். அந்நாளில் சிவனுக்குச்
சிறப்பாகிய பூசையும் சிவனடியவர்க்கு வழிபாடும் செய்வதும் திருவமுதளித்தலும் சிறந்த
சிவபுண்ணியங்கள்.
 

     7. அடியவர்கள் மேற்கொள்ளும் திருநீறு - கண்டிகை - முதலாகிய திருவேடமே
பற்றி அவர்களை வணங்குதல் வேண்டும்; அவர்களது உடல்நிலை வேறுபாடுகள்
பற்றிய உலகியல் ஒழுக்க முதலியனபற்றி எண்ணி அவரை இகழ்தலாகாது; அவ்வாறு
இகழ்தல் சிவன் திருவேடத்தினை இகழ்ந்ததாகி நரகத்துன்பப் பயன் தரும்.
 

     8. மானமழி காமக் குறி மலர்ந்த ஊனநிகழ் மேனியராய் நீறணிந்து வந்த
அடியவரை ஏனையோர் அவரது உலகியல் உடல்நிலையின் ஒழுக்கப் பண்பு பற்றி
இகழ்ந்து எண்ணி ஒதுங்கினர்; நரசிங்கமுனையர் அவரைத் திருநீற்றுகோலமே கண்டு
கைகூப்பி வணங்கிப் பேணினர்; திருநீறு சார்ந்தாரை உலகர் இகழ்ந்து நரகம் புகாமல்
வைத்த கருணையினாலே உலகர்க்கு வழிநடந்து காட்ட எண்ணி அவருக்கு
இரட்டிப்பொன் கொடுத்துத் தொழுது விடைகொடுத்தனர்; இஃது அரசர் தம்
பொருட்டாகவும் உலகர் பொருட்டாகவும் மேற்கொண்டு ஒழுகிக் காட்டிய நிலை.
 
     9. உடல் நிலை ஒழுக்கம் வேறு; உயிர்பற்றிய நிலை ஒழுக்கம் வேறு; இவற்றுள்
உயிர்பற்றிய ஒழுக்கம் உயர்ந்தது. உடல் பற்றிய ஒழுக்கம் உலகியல் அறநூல்களுள்
விதிக்கப்படுவன; உயிர்பற்றிய உயர்ந்த ஒழுக்கம் வேத சிவாகமங்களுள்
விதிக்கப்படுவன; உடல்பற்றிய தாழ்த்த அறங்களையே மேல் வைத்து உயிர்பற்றிய
மேல்நிலைகளை இகழ்வோர் நரகடைவர்; இவற்றைத் தாழவைத்து உயிர்பற்றிய
ஒழுக்கங்களை மேனிலையில் வைத்து வழி அன்பின் உறைப்புடன் ஒழுகுவோர்
சிவனது பேர் இன்பமாகிய மீளா நிலையடைகுவர்; உலகர் இவ்வுண்மைகளைச்
சிந்திப்பார்களாயின் மேம்பட்டுய்வர்.
 
     தலவிசேடம்:- இந்நாயனாரது பதி திருநாவலூர் என்பது கருதப்படும். (151)
 

நரசிங்கமுனையரைய நாயனார் புராணம் முற்றும்.
_ _ _ _ _