பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்280

     வலை வளத் துணவினின் மலிந்த தன்மை வாழ் - வலை வாரிப்படுக்கும்
மீன்களை உண்டும், அவற்றை விலைப்படுத்திப் பெறும் நிதியினைக் கொண்டும்
வாழ்க்கை நடத்தும்.
 
     “மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்” (1086) என்றதும்,
ஆண்டுரைத்தவையும் பார்க்க. வலைவளத் துணவு - வலைவளத்தினை விற்றுவரும்
ஊதியத்தால் வாழ்தல் பற்றி உரைக்க எழுந்தது மேல்வரும் பாட்டு; இத்தொழிலும்
வாழ்வும் பற்றிக் கூறுவது இந்நாயனாரின் பண்பும் வரலாறும் பற்றி எடுத்தவகையாம்.
 
     குடிமிடைந்தது - குடி நெருக்கமாக உள்ளது.
 
     நுளைப்பாடி - நுளையர் - பரதவர் - மீன்பிடிப்போர்; நுளையர் வாழும் சேரி;
பாடி - இருப்பிடம்; இப்பாட்டும் மேல்வரும் மூன்று பாட்டுக்களும் இந்நுளைப்பாடியின்
அரிய இயற்கை வரணனையாகிய தன்மைநவிற்சி யணிகள்.                   5
 
3997. புயல ளப்பன வெனவலை புறம்பணை குரம்பை;
யயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல்;
வியல ளக்கரின் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள்.
                     6
     (இ-ள்) புயல்....குரம்பை அயல் - மேகங்களை அளவிட்டாற் போல வலைகள்
புறம்பே உலரவைக்கப் பெற்ற சிறு குடில்களின் பக்கத்தில்; மீன் விலைப்பசும் பொனின்
அடுக்கல் அளப்பன - மீன் விலைக்குக் கொள்வோர் கொணர்ந்த பசும் பொன்னின்
குவியங்கள் அளவிடப்படுவன; வியல்....கயல் - விரிந்த கடலில் செலுத்தும் மீன்படகின்
றொழிலினால் வாழும் பரதவர்கள் கொணர்ந்த கயல் மீன்களை; பரத்தியர் கருநெடுங்
கண்கள் அளப்பன - (அக்கயல்களை அவரிடம் பெறும்) பரத்தியரது கரிய நீண்ட
கண்கள் அவை இவ்வளவு விலைபெறும் என்பதனைக் காட்சியாலே அளந்து விடுவன.

 

     (வி-ரை) இப்பாட்டுச் சிறந்த தன்மை நவிற்சியின் சுவைபட விளங்குவது   1
 
     புறம்பு வலை அணை குரம்பை என்க. பரதவர் வலைகளைத் தமது
குடிசைகளின் புறம்பே நாளும் உலரவைக்கும் வழக்கம் குறிப்பிடப் பட்டது.
 
     புயல் அளப்பன என - பிரிந்து கவிந்த நீண்ட வலைகள் மேகங்கள் கவிந்து
படிந்தாற் போன்றன. அளப்பில் - என்பதும் பாடம்.
 
     அளத்தல் - ஈண்டுக் கவிதல்போல என்ற உவமப் பொருள்பட வந்தது;
கடலிற்படியும் மேகங்கள் கடற்கரை விளிம்பில் உள்ள இக்குடிலி டங்களிலும்
படர்ந்தனவோ என்னும்படி என்பதும் குறிப்பு.
 
     குரம்பை அயல் மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் அளப்பன என்க.
இது மீன்கொள்வோர் பரதவர் குடில்களை அடுத்து முன்னதாகவே விலை கொடுத்துப்
பெறுதற்குக் காத்திருக்கும் நிலையினை உணர்த்திற்று; பசும் பொனின் அடுக்கல்
அளப்பன
- மீன்களின் மிக்க விலை மதிப்பையும், பொன் நாணயம் வழங்கிய
நிலையினையும் குறித்தது; அடுக்கல் அளத்தலாவது நாணயங்களை அடுக்கி எண்ணிக்
கணக்கிட்டு அளவு காணுதல்.
    வியல்.....கொணர்ந்த கயல் - திமில் வாழுநர் நள்ளிரவில் மீன் படகுகளைக்
கொண்டு கடலின் நீண்டதூரம் சென்று மீன் பிடித்து அதிகாலையிற் கொணர்வர்;
இப்படகுகள் பல மரக்கட்டைகளை பொருத்திக் கட்டப்படுதலால் கட்டுமரத் தோணி
 
____________________
     1 இதுபற்றி எனது சேக்கிழார் - 131 - 135 பக்கங்கள் பார்க்க.