பக்கம் எண் :

பெரியபுராணம்315


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

46. சத்தி நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“(கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்)
     கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (7)
 

வகை
 

“கிரிவில் லவர்தம் மடியரைத் தம்முன்பு கீழ்மைசொன்ன
திருவில் லவரையந் நாவரி வோன்றிருந் தாரைவெல்லும்
வரிவில் லவன், வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்
தெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே”

- திருத்தொண்டத் திருவந்தாதி (55)
 

விரி
 

4039. களமர் கட்ட கமலம் பொழிந்ததேன்
குளநி றைப்பது கோலொன்றி லெண்டிசை
யளவு மாணைச் சயத்தம்ப நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்.                             1
 
     புராணம்: இனி, ஆசிரியர் நிறுத்த முறையானே, எட்டாவது பொய்யடிமை
இல்லாத புலவர் சருக்கத்துள், ஏழாவது சத்தி நாயனாரது புராணங் கூறத்
தொடங்குகின்றார். சத்தி நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும்பகுதி.
 
     தொகை: வெற்றியுடைய சத்திநாயனார் என்னும் பெயரையுடையவரும்
வரிஞ்சையூர்த் தலைவருமாகிய நாயனாரது அடியவர்க்கும் நான் அடிமையாவேன்.
 
     தொகை நூலுள் பொய்யடிமை யில்லாத என்று தொடங்கும் திருப்பாட்டில்
மூன்றாவது அடியில் மூன்று அடியார்களை ஒருங்கு சேர்த்துப் போற்றியுள்ளமை சிறப்பு;
அவர்களுள் மூன்றாவது போற்றப்பட்டவர் சத்தியார். வரிஞ்சையூர் நாயனாரது ஊர்;
கழல் - வெற்றிக்குறி, இதனைத் “திருந்தாரை வெல்லும் வரிவில்லவன்” என்று
வகைநூல் வகுத்தது; ஊரும் பேரும் பண்பும் தொகைநூல் தொகுத்தது.
 
     வகை; கிரி வில்லவரை...அரிவோன் - மலையை வில்லாக உடைய
சிவபெருமானது அடியவர்களைத் தம் முன்னர் இகழ்ந்து பேசிய
திருவிலிகளாகியவர்களை அவ்வாறு பேசும் நாவினை அரிந்திடுவோரும்;
திருந்தாரை.....வில்லவன் - பகை வெல்லும் வரிந்து கட்டிய வில்லையுடையவரும்;
வயல்.....சத்தியே - வயல்களில்