பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்316

பூத்த செங்கழுநீர்ப் பூக்களிற் படிந்து வரும் தென்றற் காற்றுத் தெருக்களில் மணங்
்கமழ வீசுதற்கிடமாகிய தெருக்களையுடைய தென்வரிஞ்சையூரில் விளங்குகின்ற
சத்தியார் என்பவரே யாவர்.
 

     இத்திருப்பாட்டுத் திரிபு என்னும் சொல்லணியில் அமைந்தது; அடியவரைச் -
சொன்ன
என்று கூட்டுக. திருந்தார் - பகைவர்; தாம் பற்றி ஒழுகிக்காட்டியும் சிவ
நெறி கண்டு திருந்தாத புல்லர் என்றலுமாம். வரி - வரிந்து கட்டிய;
செங்கழுநீர்....வரிஞ்சையூர் - நீர்வளத்தைக் குறித்தது; செங்கழுநீர் மலர் மிக்கதொரு
நறுமணமுள்ள நீர்ப்பூ; நா வரிவோனும் - வில்லவனும் சத்தியே என்று கூட்டுக;
எண்ணும்மைகள் தொக்கன; தென் - அழகு; தெற்கு என்றலுமாம். வரிவில்லவன் -
நாவரியும் வல்லமை பெறுதற்குரிய காரணம் காட்டியபடி.
 

     ஊரும் பேரும் பண்பும் சரிதமும் வகைநூல் வகுத்தது.
 

     விரி: 4039. (இ-ள்) களமர்.....நிறைப்பது - மள்ளர்கள் களையாகக் களைந்த
தாமரை மலர்கள் பொழிந்த தேனானது குளத்தை நிறைக்க உள்ளது; கோல்
ஒன்றில்.....வளவர் - ஒரே செங்கோல் வலிமையால் எட்டுத் திக்குகளிலும் தமது செயத்
தம்பங்களை நாட்டி அரசு புரியும் சோழர்களது; காவிரி நாட்டு வரிஞ்சையூர் - காவிரி
பாயும் நாட்டில் உள்ள வரிஞ்சையூர் என்பது.
 
     (வி-ரை) களமர்...நிறைப்பது - நீர்வளத்தால் நாட்டுச் சிறப்புரைத்தவாறு;
தொகைநூலை விரித்து வகைநூல் நகரச் சிறப்புரைத்தது; விரிநூல் அதனினும் விரிந்து
அதற்குக் காரணமாகிய நாட்டுச் சிறப்புரைத்த கவிநயம் கண்டு களிக்கத்தக்கது.
முன்னையது, மூக்கானுகரும் சுவை கூற, இங்கு நாவின் சுவைபடக் கூறியதும் கவிநயம்.
 
     கட்ட கமலம் பொழிந்த தேன் - என்றது அன்பரை இகழ்ந்து நாவினை
அரியும் இச்சரிதக் குறிப்புப்பட நிற்றலும் காண்க. இஃது இறைச்சிப் பொருட் குறிப்பு
(உள்ளுறை) என்ப; கடியப்பட்ட கமலங்களும் குளநிறைக்கும் உபகாரம் செய்தல் போல
இந்நாயனார் அரிந்த நாக்களும் உலகைத்திருத்தும் உபகாரக் கருவிகளாம் என்ற
குறிப்பும் காண்க. வயல்களில் செங்கழுநீர் பூத்தலை வகைநூல் பேச, அங்குத்
தாமரைகள் பூத்தலும் அவை கடியப்படுதலும் தொடர்ந்து கூறிய நயமும் காண்க. கட்ட.
- களைபிடுங்கி எறிந்த;
 
     குளம் - வயல்களில் அங்கங்கும் உள்ள வாவிகள். தாமரைத் தேன் வடிந்து
குளநிறைத்தலாவது வயல்களிற் கட்ட தாமரைகளைக் குளக்கரையில் பல பக்கமும்
குவிக்க அப்பூக்களினின்றும் வடிந்த தேன் குளத்திற் பாய்தல்; நிறைத்தல். மிகுதிப்
படுத்துதல்.
 
     ே்காலொன்றில்....நாட்டிய - கோல் - செங்கோல்; ஒன்று - ஒப்பற்ற;
மாறில்லாத; ஏக சக்கராதிபத்யம் என்பது வடமொழி. கோல் ஒன்றில் எண்டிசை -
எண்ணின் சுவைபடக் கூறியது கவிநயம்; எல்லாத் திக்குகளிலும் தமது அரசாட்சியின்
ஆணை செலுத்திய ன்பது கருத்து அந்நாளில் சோழ மன்னர்களது ஆட்சியின் பரப்புக்
கூறியபடி.
 
     வளவர் காவிரி நாட்டு - எண்டிசை என்றதனால் வளவர்க்குரியனவாய்ப் பல
நாடுகளிருத்தல் கூறப்பட்டமையின், அவற்றுள் காவிரி பாயும் நாடு என்க. காவிரி -
பிறிதினியைபு நீக்கிய விசேடண.
 
     வரிஞ்சையூர் - தலவிசேடம் பார்க்க.
 
     ஆண்டுச் செயத்தறி - என்பதும் பாடம்.                          1