பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்320

     ஆற்றினர் - புரிந்தனர்; ஆற்றுதல் - செய்தல்.
 

     ஆற்றினர் - ஆற்றினர் - சொற்பின் வருநிலை என்னும் சொல்லணி.

     5

4044.    ஐய மின்றி யரிய திருப்பணி
மெய்யி னாற்செய்த வீரத் திருத்தொண்டர்
வைய முய்ய மணிமன்று ளாடுவார்
செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர்.                                  6
 
     (இ-ள்) ஐயமின்றி...........திருத்தொண்டர் - சந்தேகமில்லாமல் அரியதாகிய
திருத்தொண்டினை மெய்யினாலே செய்த வீரத்தன்மை, பொருந்திய
திருத்தொண்டராகிய சத்தியார்; வையம்.......சேர்ந்தனர் - உலகம் உய்யும் பொருட்டு
அழகிய திருவம்பலத்தில் ஆடுவாரது செம்மைதரும் பாதத் திருநிழலிற் சேர்ந்தனர்.
 
     (வி-ரை) ஐயமின்றி - ஐயமாவது, மக்களின் நாவினை அரிந்து வலி செய்தல்
தருமமாமோ என்ற ஐயமில்லாமல்; சிவாபராதத்தினைப் போக்குதலால் இது
எவ்விதமாகிய சந்தேகத்திற்கு மிடமில்லாமல் சிவப்பணியேயாகும் என்ற துணிவுடன்.
     அரிய - பிறராற் செய்தற்கரிய; “செயற்கரிய செய்வார் பெரியர்” (குறள்). இஃது
செயற்கரியபணி என்றே எவரும் நிச்சயமாகக்கொள்ளும் என்றலுமாம்.
 
    மெய்யினாற் செய்த - மெய் - உண்மை, வாய்மை, உண்மையன்பு; மெய்யினால்
- உடலின் செயலாக என்றலுமாம். மெய்யால்; இன் சாரியை
 
     வீரம் - “ஆண்மைத் திருப்பணி” (4043); இத்திருப்பணிக்கு மிக்க வீரம்
வேண்டற்பாலதாம்.
 
     வையமுய்ய - “வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற , ஏராரு மணி
மன்று ளெடுத்த திருவடி” (புராண வரலாறு). திருஅம்பலத்தின்கண் இறைவர்
ஐந்தொழிற் கூத்தியற்றுதல் உலகமுய்தற் பொருட்டேயாம் என்பது.
 
    செய்ய - செம்மைதரும்; செய்ய - தாமரை மலர்போலச் சிவந்த என்றலுமாம்.
 

6

4045. நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்
தாய மாதவத் தையடி கள்ளெனுந்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.                                 7
 
     (இ-ள்) நாயனார்...பணிந்து -சிவபெருமான் திருத்தொண்டர்களை நன்மை
சொல்லாதவர்கள் வீழ அவர்களது நாவினை அரியும் சத்தி நாயனாரது திருவடிகளைப்
பணிந்து; (அத்துணையாலே) ஆய..சொல்லுவாம் -சிவநெறி ஆகிய மாதவத்தையுடைய
ஐயடிகள் என்னும் தூய காடவரது அடிமைத் திறத்தினைச் சொல்லுவோம்.
 
     (வி-ரை) நாயனார் - தலைவர்; முழுமுதற் தலைவராதலின் சிவபெருமானுக்கே
உரிய திருநாமம். “தில்லைநாயனார்” (திருவிசை - சேதி) நாயனாரையும்
தொண்டர்களையும் என்றலுமாம்.
 
     நலங் கூறலார் - இகழ்ந்து கூறுவார்; சொல்லவேண்டிய நன்மை கூறாமையே
இகழ்ச்சியாவது என்றலுமாம். “இதமுயிர்க்குறுதி செய்தல் அகிதமற்றது செய்யாமை”
(சித்தி - 2- 13).