உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
47. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (7) |
வகை |
| “சத்தித் தடக்கைக் குமரனற் றாதைதன் றானமெல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து “முடியரசா மத்திற்கு மும்மைநன் றாலரற் காயைய மேற்ற” லென்னும் பத்திக் கடலை யடிகளா கின்றநம் பல்லவனே.” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (56) |
விரி |
4046. | வையநிகழ் பல்லவர்தங் குலமரபின் வழித்தோன்றி வெய்யகலி யும்பகையு மிகையொழியும் வகையடக்கிச் செய்யசடை யவர்சைவத் திருநெறியா லரசளிப்பார் ஐயடிக ணீதியா லடிப்படுத்துஞ் செங்கோலார்; 1 |
4047. | திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தி லெவ்வுயிரும் பெருமையுட னினிதமரப் பிறபுலங்க ளடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேற் சைவமுடன் அருமறையின் றுறைவிளங்க வரசளிக்கு மந்நாளில், 2 |
4048. | மன்னவரும் பணிசெய்ய வடநூறென் றமிழ்முதலாம் பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா “ரரசாட்சி இன்ன” லென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சி நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார். 3 |
புராணம் : இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், எட்டாவது, பொய்யடிமை யில்லாதபுலவர் சருக்கத்தில் எட்டாவது, ஐயடிகள், காடவர்கோன் நாயனாரது புராணங் கூறுகின்றார்; ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது சரித வரலாறும் பண்புங் கூறும்பகுதி. |