பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்326

     4049. (இ-ள்) தொண்டு உரிமை புரக்கின்றார் - திருத்தொண்டினது உரிமைச்
செயல்களை வழுவாமற் காத்து வருகின்ற நாயனார்; சூழ்வேலை...இறைஞ்சி - கடல்
சூழ்ந்த இந்நில உலகத்திலே தேவர் பெருமானாராகிய சிவபெருமான் விரும்பி விளங்க
எழுந்தருளிய ஆலயங்க ளெல்லாவற்றையும் சென்று கண்டு வணங்கி;
திருத்தொண்டின்........செய்தே - திருத்தொண்டுக் கேற்ற கடமையாகிய பணிவிடைகள்
எல்லாவற்றையும் செய்தே; வண்டமிழின்......வழுத்துவார் - ஒவ்வோர் பதியிலும்
வளப்பமுடைய தமிழின் வெண்பா ஒவ்வொன்றாகச் சேர்த்தித் துதிப்பாராகி;   4

 

     4050. (இ-ள்) பெருத்தெழு காதலில் வணங்கி - பெருகி எழுகின்ற காதலால்
வணங்கி; பெரும்பற்ற.....நேர்ந்திறைஞ்சி - தண்ணிய பெரும் பற்றப் புலியூரில்
திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் சிவந்த சடையினையுடைய கூத்தரது
திருக்கூத்தினை நேர்பட்டுக் கும்பிட்டு; நெடுந்தகையார்.....புனைந்தார் - பெருந்தகைமை
யுடையார் விருப்பத்துடனே செந்தமிழினிய, வெண்பாவாகிய மெல்லிய மலரைப்
புனைந்தருளினர்.                                                  5
 

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 

     4049. (வி-ரை) உரிமை - உரிமைச் செயல்கள் புரத்தல் - வழுவாமற் காத்தல்;
முட்டாது செய்தல்.
 
     அண்டர்பிரான்.....கண்டிறைஞ்சி - தேவ தேவராகிய சிவபெருமானுடைய
பதிகள் தோறும் யாத்திரையாகச் சென்று வணங்கி. எல்லா(மு)ம் - அனைத்தையும்
முற்ற என்பது குறிப்பு; முற்றும்மை தொக்கது. “கோயில்களெல்லா மெய்தி” (4051) என
மேலும் கூறுதல் காண்க.
 
     அண்டர்பிரான்.........ஆன எலாம் - இவ்வடி முற்றுமோனை. உலகின்கண் -
ஆலயங்கள்
- சிவனை வணங்கி நலம் பெறும் வாய்ப்புக்கள் இந்நிலவுலகில்தான்
உள்ளன என்பது குறிப்பு. “புவனியிற்போய்” (திருவா).
 
     திருத்தொண்டின் கடன் ஏற்றபணி - இவை ஏனைய சரியைத் தொழில்களும்
அடியார் வழிபாடும் ஆம். ஏகாரம் தேற்றம். கடன் - முறைமை.
 
     வழுத்துவார் - வழுத்தும் நியமம் பூண்டாராகி; ஓரொன்றா - ஒவ் வோர் பதிக்கு
ஓர் ஓர் வெண்பாவாக; வழுத்துவார் - துதித்தலை மேற்கொண்டனராகி.
 
     இந்நியமத்தினை முதலிற் றொடங்கி ஆற்றின் இடம் தில்லைச் சிற்றம்பலமாம்
என்பது மேல்வரும் பாட்டாலுணர்த்தப்படும்.                            4
 
     4050. (வி-ரை) பெருத்தெழு காதல் - மேன்மேலும் வளர்ந்தோங்கும்
பெருவிருப்பம். ஆராமையால் மிகுகின்ற; “ஆராமை” (3570); காதலால் - அன்புடன்.
 
     பெரும்....சிற்றம்பலத்து - “தில்லைச்சிற்றம்பலமே” என்ற திருவெண்பாவை
விரித்தது.
 
     நேர்ந்து - சேர்ந்து கண்டு முற்பட்டு வணங்கி; “சேர்” என்பது வெண்பா
 
     மென்மலர் - நுண்ணிய பொருளுடைமையால் மென்மலல்ர் என்றார். மலர்
போன்றதை மலர் என்றார். மலர் - மலர்களாலாகிய மாலைக்கு ஆகுபெயர்; அது
போன்ற பாமாலைக்கு உவமையாகுபெயர்; நால்வகைப் பூக்களால் இயன்ற மாலை
போல நால்வகைச் சொற்களால் தொகுப்பது பாமாலை; க்ஷேத்திரக் கோவைத்
திருப்பதிகம் முதலியவை காண்க.
 
     இன் வெண்பா - இன் - இனிய சொல்லும் பொருளும் உடைய; நேரிசை
வெண்பா என்ற யாப்பின் பாகுபாடும் குறித்தது. “இன்மொழி வெண்பா” (4049);
ழுஇன்றமிழ் வெண்பா” (4051).                                        5