பக்கம் எண் :

பெரியபுராணம்327

க்ஷேத்திரத் திருவெண்பா
 

     தில்லைத் திருச்சிற்றம்பலம்
 

திருச்சிற்றம்பலம்
 

ஓடுகின்ற நீர்மை யொழிதலுமே யுற்றாருங்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமு னன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.                       23
 
     *           *           *           *           *                                                              1
 
திருமயானம்
 
உய்யு மருந்திதனை யுண்மினென வுற்றாருங்
கையிற் பிடித்தெதிரே காட்டியக்காற் - பைய
வெழுந்திருமி யான்வேண்டே னென்னாமு னெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.                           24

திருச்சிற்றம்பலம்
 

4051.     அவ்வகையா லருள்பெற்றங் கமர்ந்துசில நாள்வைகி
இவ்வுலகிற் றம்பெருமான் கோயில்களெல் லாமெய்திச்
செவ்வியவன் பொடுபணிந்து திருப்பணியேற் றனசெய்தே
யெவ்வுலகும் புகழ்ந்தேத்து மின்றமிழ்வெண் பாமொழிந்தார்.        6
 
     (இ-ள்) அவ்வகையால்.....வைகி - அந்த வகையினாலே திருவருளினைப் பெற்று
அப்பதியில் அமர்ந்து சில நாட்கள் தங்கியருளி; இவ்வுலகில்.......எய்தி -
இவ்வுலகத்திலே தம்பெருமானார் வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாவற்றிலும் சென்று
சேர்ந்து; செவ்விய....செய்தே - செம்மையாகிய அன்பினாலே வணங்கி ஏற்றனவாகிய
திருப்பணிகளையும் செய்தே; எவ்வுலகும்.....மொழிந்தார் - எல்லாவுலகங்களும் புகழ்ந்து
ஏத்துகின்ற இனிய தமிழ் வெண்பாக்களைப் பாடித் துதித்தனர்.
 
     (வி-ரை) அவ்வகையால் - முன்பாட்டிற் கூறிய அந்த வகையினாலே;
“மென்மலர்” புனைதலாலே. இவ்வுலகில் - “உலகின்கண்” (4049).
 
     அங்கு - திருத்தில்லையில். அமர்ந்து - விரும்பியிருந்து; அமர்தல் -
விரும்புதல்.
 
     ஏற்றன - திருப்பணி - செய்தே - என்க. “கடன் ஏற்ற பணி செய்தே” -
(4049). அரசர் நிலைக்கும் அன்பின் பெருக்குக்கும் ஏற்றவாறு.
 
     எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் - தமிழ் வெண்பா - எவ்வுலகத்தோர்களும்
இத்துதிகளைச் சொல்லி இவற்றால் இறைவனை ஏத்தும் என்றும்,
இவ்வெண்பாக்களையே புகழ்ந்து என்றும் உரைக்க நின்றது; வெண்பாக்களால் ஏத்தும் -
வெண்பாக்களை ஏத்தும் என இருவழியும் உரைக்க. தமிழ் - இன் - வெண்பா என்க.
 
     மென்மலர் - தொடர்ச்சியாகிய மாலையா யின்றிப் பதிதோறும் ஒவ்வோர் தனி வெண்பாக்களாம் என்பார் மலர் என்றார்.                         6
 
4052. இந்நெறியா லரனடியா ரின்பமுற விசைந்தபணி
பன்னெடுநா ளாற்றியபின் பரமர்திரு வடிநிழற்கீழ்
மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார்
கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரை யடிகளார்.                7
 
     (இ-ள்) இந்நெறியால்....ஆற்றியபின் - இந்த நெறியினாலே சிவனடியார்கள்
இன்பமடையத் தமக்கு இசைந்த பணிகளைப் பல நீண்ட காலமாகச் செய்திருந்த