பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்330


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி
_ _ _ _ _
 

தொகை
 

“ஆரூர னாரூரி லம்மானுக்காளே”

- திருத்தொண்டத் தொகை - (7)
 

வகை
 

    

 

“பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்
சொல்லவன், றென்புக லூரரன் பாற்றுய்ய செம்பொன்கொள்ள
வல்லவ, னாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு
நல்லவன்
, றன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (57)
 

விரி
 

4054. உளத்திலொரு துளக்கமிலோ முலகுய்ய விருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு கனகமாற் றினிலிட்டு
வளத்தின்மலிந் தேழுலகம் வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்திலெடுத் தார்வினையின் குழிவாய்நின் றெமையெடுத்தார்.           9
 
     துதி : திருத்தொண்டத் தொகைப் பதிகப் பாட்டுக்களில் நான்காமடியின்
பிற்பகுதியில் வரும் பொருள், ஆளுடைய நம்பிகள் தம்மைக் கூறும் பகுதியாதலின்,
அதனை நம்பியாண்டார் நம்பிகளும் ஆசிரியரும் அவரது துதியாக வைத்து வகுத்தும்
விரித்தும் உரைக்குமாறு, நம்பிகளது சரிதத்தில் ஒவ்வோர் பகுதியை வைத்துப்
போற்றியது.
 
     தொகை: முன்கூறிய அடியார்க்கு ஆளாவதோடு திருவாரூர் அம்மானுக்கும்
ஆரூரன் ஆகிய நான் அடிமையாவேன்; முன்கூறிய அடியேன் யாரென்னில் ஆரூரில்
அம்மானுக்காளாகவுள்ள ஆரூரன் என்றலுமாம்.
 
     வகை: பல்லவை....சொல்லவன் - சூரியனைப் பற்களை பறித்த சிவபெருமானது
பாதங்களைப் புகழ்கின்ற சொற்களையுடையவரும்; தென்புகலூர் - வல்லவன் - அழகிய,
திருப்புகலூர் இறைவர்பால் (செங்கல்லையே) தூய செம்பொன்னாகப் பெற வல்லவரும்;
நாட்டியத்தான்குடி......நல்லவன் - திருநாட்டியத்தான் குடியில் விளங்க எழுந்தருளிய
இறைவராகிய மாணிக்கவண்ண நாதருக்கு அன்புடையவரும் ஆகிய நம்பியாரூரருடைய;
பதி.......நன்னகரே - ஊர் திருநாவலூர் என்கின்ற நல்ல நகரேயாம்.
 
     பல்லவை - அவை பகுதிப் பொருள் விகுதி; செங்கதிரோன் - சூரியன்;
சூரியனைப் பற்களைப் பறித்தது தக்கயாக சங்காரத்தின் நிகழ்ச்சி; “சூரியனார்
தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரி்த்தவா றுந்தீபற” (திருவா) துய்ய - தூய;