சிக்கப்பட்டவரைத் - தம் வயமாக்கும் கருத்து; சிற்றம்பலமே - ஏகாரம் பிரிநிலை; நல்லச் சிற்றம்பலமே - ஏகாரம் தேற்றமும் பிரிநிலையுமாம். (கோடுகின்றார் - குறுகிற்று - ஆதலின்) முன் - சேர் என்று காரண காரியமாக உரைத்துக்கொள்க. அச்சில் - என்பதற்கு - உடம்பில் என்றும், தம்பலம் நண்ணுதல் வாயிலுள்ள தம்பலம் மார்பில் வடிதல் என்றும் கூறுவாரும் உளர். நெஞ்சே - சேர் - நினைத்தலேனும் செய் என்ற குறிப்பு. |
இத்தலம் சோழ நாட்டில் காவிரி வடகரை 1-வது பதி; கோயில் என்று சிறப்பாக வழங்கப் பெறுவது. இங்கு நாயனார் இதனைத் தில்லைச்சிற்றம்பலம் என்று வழங்குகிறார். 1 |
2. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம். |
| | “கடுவடுத்த நீர்கொடுவா; காடிதா”வென்று நடுநடுத்து நாவடங்கா முன்னம் - பொடியடுத்த பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக் கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட. 2 | |
(இ-ள்) கடு அடுத்த....என்று - குடிநீர் கொண்டுவரா, காடியினைக்கொடு என்று கூறி; நடுநடுத்து....முன்னம் - நடுநடுங்கி நாச்சொல் அடங்காத முன்னே; பொடி....முன் - சாம்பல் நிறைந்த சுடுகாட்டிலே சேராத முன்னமே; பன்....கிட - பல மாடங்களையுடைய தென் குடந்தையில் உள்ள திருக்கீழ்க் கோட்டத்தினைத் துதித்துக் கிடப்பாயாக. |
(வி-ரை) கடுவடுத்த நீர் - கடு - கடுக்காய்; இங்கு அதனையுள்ள மருந்துப் பண்டங்களுக்குக் குறியீடாகிய பொருளில் வந்தது. அடுத்த - இட்டுச் சுருங்கக் காய்ச்சிய; நீர் - குடிநீர்; காடி - புளிங்கஞ்சி நீர். இவற்றைக்கேட்டல் நாவறட்சியாலாகுவது; நடுநடுத்து நாவடங்குதல் - பேச்சுக்குழறி யடங்குதல்; உயிர்போந் தறுவாயில் நிகழும் குறிகளுள் ஒன்று; “பவனமாய்ச் சோடையாய் நாவெழா” (தேவா - பிள் - திருவாரூர்); பொடி - (சுடலைச்) சாம்பரைக் குறித்தது; பாழ்க்கோட்டம் - சுடுகாடு; ஈமம்; செப்பிக் கிட - முன்கூறிய குறிகள் தொடரும்போது செப்பிக்கிடத்தலன்றி வேறொன்றும் செயல் வலியின்மையாகுமாதலின் கிட என்றார். முன்பாட்டில் சேர் என்றார் அதனுட் குறித்தது மூப்புக் குறுகும் காலமேயாதலின் அது முடுகுமுன்பு சென்று சேரும் வலியுண்மை கருதி. குடந்தைக் கீழ்க்கோட்டம் - இது திருநாகேசுவரசுவாமி கோயில் என வழங்குவது. பாடல் பெற்றதலம். “கூத்தனார்” என்று இதன் இறைவரை அரசுகள் பாடியருளினர். 2 |
இது சோழநாட்டில் காவிரித் தென்கரை 27-வது பதி. |
3. திரு ஐயாறு |
| | குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்திருமி யேங்கி நுரைத்தேறி - வந்துந்தி யையாறு வாயாறு பாயாமு னெஞ்சமே யையாறு வாயா லழை. 3 | |
(இ-ள்) குந்தி....ஊன்றி - (வலியின்மையால்) குந்திக் குந்தி நடந்து உடல் வளைந்து ஒரு கையில் கோலினை ஊன்றி; நொந்து....பாயாமுன் - வருந்தி இருமி |