| விளக்குக்களைச் சிவபெருமான் றிருக்கோயிலினுள்ளே எரித்து நாவாரத் துதிப்பாராகிய இந்நாயனார்; நல்குரவு.....அடைந்தார் - வறுமை வந்து அடையவே, (வறுமையுடன் ஈண்டிருத்தல் தகாதென்று) தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாராகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருத்தில்லையினைப்போய் அடைந்தனர். |
(வி-ரை) தாவாத - கெடாத; தலைநிற்றல் - சிறத்தல்; பயன் இது - செல்வம் பெற்றபயன் இதுவேயாம் என்பது; பிரிநிலை ஏகாரம் தொக்கது. "படைத்த நிதிப்பயன் கொள்வார்" (4117), "வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்" (504) என்பன முதலியவை காண்க. |
ஓவாத - நீங்காத; இடையறாத. |
நாவார - ஆர்தல் - நிரம்புதல். |
பரவுவார் - வினைப்பெயர்; பரவுவார் - அடைந்தார் என்று கூட்டுக. |
நல்குரவு.....அடைந்தார் - "செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே" (தேவா) என்றபடி நல்குரவு எல்லாவற்றையும் நீக்கும் பெருஞ்செல்வ முடையராகிய இறைவர் வெளிப்பட வீற்றிருந்தருளும் இடமாதலின் தில்லைக்குச் சென்றடைந்தார் என்பது குறிப்பு. |
| 4058. | தில்லைநகர் மணிமன்று ளாடுகின்ற சேவடிகள் அல்கியவன் புடனிறைஞ்சி யமர்கின்றார் புரமெரித்த வில்லியார் திருப்புலீச் சரத்தின்கண் விளக்கெரிக்க இல்லிடையுள் ளனமாறி யெரித்துவரு மந்நாளில், 4 |
| 4059. | ஆயசெயன் மாண்டதற்பி னயலவர்பா லிரப்பஞ்சிக் காயமுயற் சியிலரிந்த கணம்புல்லுக் கொடுவந்து மேயவிலைக் குக்கொடுத்து விலைப்பொருளா னெய்மாறித் தூயதிரு விளக்கெரித்தார் துளக்கறுமெய்த் தொண்டனார். 5 |
4058. (இ-ள்) தில்லைநகர்....அமர்கின்றார் - திருத்தில்லை நகரத்தில் அழகிய திருவம்பலத்திலே ஆடுகின்ற திருவடிகளினிடத்தே தங்கிய அன்போடும் வணங்கி அங்கு விரும்பியிருக்கின்றாராகிய நாயனார்; புரமெரித்த....எரிக்க - முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்திய இறைவரது திருப்புலீச்சரம் என்னும் திருக்கோயிலில் விளக்கு எரிக்கும் திருப்பணி செய்வதற்கு; இல்லிடை...அந்நாளில் - தமது மனையில் உள்ளனவாகிய சங்கமப் பொருள்களை விற்று எரித்து வருகின்ற அந்நாளில், |
| 4 |
4059. (இ-ள்) ஆயசெயல் மாண்டதற்பின் - அவ்வாறாகிய அந்தச் செய்கையும் (மனையில் விற்றற்குப் பொருளின்மையால்) நீங்கிய பின்பு; அயலவர்பால் இரப்பு அஞ்சி - பிறர்பால் இரத்தற்றொழிலை அஞ்சி; காய முயற்சியில்....நெய்மாறி - தமது உடம்பின் முயற்சியாலே அரிந்த கணம்புல்லினை அரிந்தெடுத்துக்கொண்டு வந்து கிடைத்த விலைக்குக் கொடுத்து அவ்வாறு பெற்ற விலைப் பொருளினாலே நெய்வாங்கி; தூய.....தொண்டனார் - அசைவில்லாத மெய்ம்மைத் தொண்டுபுரிவாராகிய நாயனார் தூய்மையாகிய திருவிளக்கினை எரித்தனர். 5 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. |
4056. (வி-ரை) அல்கிய - தங்கிய; அல்கல் - தங்குதல்; சிவன்பணி செய்வோர் வறுமை வந்தபோது அன்பு குறைந்து வெறுப்பும் அடைவது உலகியல்பு |