பக்கம் எண் :

பெரியபுராணம்375

பெற்ற தொடர்ச்சியினாலே; வாய்ந்த....சேர்ந்தார் - பொருந்திய மனத்தினாற் சேர்ந்தது
போலவே உடம்பினாலும் வடகயிலை மலையினைச் சேர்ந்தனர்.

4
 

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4066. (வி-ரை) இன்பமொழிப் பயனியம்புதலாவது - இன் மொழியினையே
எல்லாரும் மகிழ்வர்; அந்த இன்ப மொழிதானும் இறைவர் புகழ்கூறப் பெறின் அதன்
பயனைப் பெறும்; என்ற உண்மையின்படி உலகினருக்குச் சொல்லுதல்.
 
     தேவர்க்கு முதற்றேவர் - சிவபெருமான்; முதல் - முதல்வர்;
சங்காரகாரணனாகிய முதல்வன் சிவன் என்ற கருத்து.
 
     விடையவர்தம் - திருக்கயிலை என்று கூட்டுக. விடையவர்தம் காவுற்ற -
செலுத்துகின்ற இடபவாகனத்தையுடைய சிவனார்; கா - சுமத்தல் - செலுத்துதல்;
என்றலுமாம். நந்தி தேவரது காவல் பொருந்திய என்றலுமாம்.
 
     காவுற்ற - சோலைகள் சூழ்ந்த; கா - சோலை; விடையவர்தாம் காவுற்ற
என்பது பாடமாயின் சிவபெருமான் அடியாரைக் காத்தற்றொழில் செய்யும் என்க. கா -
காத்தல் .                                                 3
 
     4067. (வி-ரை) இசை நிறுத்துதலாவது தமது புகழ் நிலைபெறச்செய்தல்.
 
     ஆய்ந்த வுணர்வு -ஆய்தல் -ஆராய்ந்து தெளிதல்; உணர்வு -உணர்விலே;             
     தொடர்பு - பொருத்தம் - காரணம். இடையறா அன்பு - “அயரா அன்பு”
(போதம் -11)
 
     மனம்போலுடம்பும் வடகயிலை மேவுதலாவது - முன்னர் மறவாமையினால்
மனம் கயிலையை எப்போதும் சேர்ந்திருந்தது. இப்போது உடம்பும் கூடிச் சீவன்
முத்தராய்த் திருக்கயிலை மலையினிற் சேர்ந்தமர்ந்தனர் என்பதாம்.            4
 
4068. வேரியார் மலர்க்கொன்றை வேணியா ரடிபேணுங்
காரியார் கழல்வணங்கி யவரளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர்தம் மதிமரபிற்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.                      5
     (இ-ள்) வேரியார்....கருணையினால் - தேன் பொருந்திய மலராகிய கொன்றையை
அணிந்த சடையினை உடைய இறைவரது திருவடியைப் பேணுகின்ற காரி நாயனாரது
கழல்களை வணங்கி; அவர் அளித்த கருணையினால் - அவர் செய்த கருணைத்
திறத்தின் துணையினாலே; வாரி ஆர்.......நெடுமாறர் - கடல்போல நிறைந்து வழிகின்ற
மதம் பொருந்திய யானைப் படையினையுடைய பாண்டியர்களுக்குரிய சத்திரவமிசத்திலே
நின்றசீர்நெடுமாற நாயனாரது; திருத்தொண்டு செப்புவாம் - திருத்தொண்டினைச்
சொல்வோம்.
 
     (வி-ரை) இஃது இச்சரித முடிப்பும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாம். இது
கவிக்கூற்று. இப்பாட்டுத் திரிபு என்னும் சொல்லணி.
 
     வேரி - மணமுமாம். பேணுதல் - விரும்பி வழிபடுதல்; ஆர்தல் - நிறைதல்.
 
     மதயானை - இச்சரிதத்துள் வரும் போர்க் குறிப்பு.
 
     கருணையினால் - கருணையின் துணையினால்.
 
     வாரி - கடல் - இங்குக் கடலின் தன்மையாகிய நிறைவு குறித்தது; ஆர்தல் -
பொருந்துதல்; வாரி - ஆர் - கடல்போல நிறைந்த.
 
     வழுதியர் தம் மதிமரபு - பாண்டியர்க்குரிய சந்திரவமிசம்; பாண்டியர் சந்திர
மரபினர்; (சோழர் சூரிய மரபினர்); சீரியார் - நின்ற சீருடையார்.