உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
50. நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “நிறைக்கொண்ட சிந்தையை னெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (8) |
வகை |
| கார்த்தண் முகிற்கைக் கடற்கா ழியர்பெரு மாற்கெதிராய் ஆர்த்த வமண ஈழிந்தது கண்டுமற் றாங்கவரைக் கூர்த்த கழுவி னுதிவைத்த பஞ்சவ னென்றுரைக்கும் வார்த்தை யதபண்டு நெல்வே லியில்வென்ற மாறனுக்கே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (60) |
விரி |
4069. | தடுமாறு நெறியதனைத் தவமென்று தம்முடலை அடுமாறு செய்தொழுகு மமண்வலையி லகப்பட்டு விடுமாறு தமிழ்விரகர் வினைமாறுங் கழலடைந்த நெடுமாற னார்பெருமை யுலகேழு நிகழ்ந்ததால். 1 |
புராணம்: இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், ஒன்பதாவது, கறைக்கண்டன் சருக்கத்தில் மூன்றாவது நின்றசீர் நெடுமாற நாயனார் புராணங் கூறத்தொடங்குகின்றார்; அந்நாயனாரது சரிதவரலாறும் பண்புங் கூறும் பகுதி. |
தொகை: நிறையினை மேற்கொண்ட சிந்தையினாலே நெல்வேலிப் போரினை வென்றவராகிய நின்றசீர் நெடுமாறனுடைய அடியார்க்கும் நான் அடியேனாவேன். |
நிறைக்கொண்ட சிந்தையால் - மண்ணாசை குரோதம் முதலியதீய எண்ணங்களாலன்றித், தம் நாடுகாவல் பற்றிய நீதிமுறையாலே; நெல்வேலி - திருநெல்வேலியில் நிகழ்ந்த போர்; இப்போரினை, மேல், வகை நூலும் விரிநூலும் விரித்தமை காண்க; நெடுமாறன் - இப்பாண்டியரது பெயர் - நின்ற சீர் என்பது சரிதவரலாற்றிற் கண்ட பண்பு காரணமாகப் போந்த பெயர்; பெயரும் வரலாறும் பண்பும் தொகைநூல் பேசிற்று. |
வகை: கார்த்தண்....கண்டு - கரிய தண்ணிய முகிலைப் போன்ற கையினையுடைய கடற்காழியவரது பெருமானாகிய ஆளுடைய பிள்ளையாருக்குப் பகையாய் |