பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்378

ஆர்த்துவந்த சமணர்கள் வாதில் தோற்று அழிவெய்தியதைக் கண்டு (பின்னர்);
ஆங்க....பஞ்சவனென்று - தோல்வியுற்ற அவ்விடத்தே அவ்வமணர்களைக்
கூர்மையுடைய கழுவின் முனையிலே ஏற்றிவைத்த பாண்டியர் என்று; உரைக்கும்
வார்த்தையது - சொல்லும் புகழானது; பண்டு....மாறனுக்கே - முன்னாளில் நெல்வேலிப்
போரினில் வெள்ளி கொண்ட பாண்டியருக்கே (உரியது).
 
     கார் - கரிய; கார் காலமும் ஆம்; முகிற்கை - முகில்போன்று கைம்மாறு
கருதாது கொடுக்கும் கைவளமாகிய உதவி; ஆர்த்தல் - ஆரவாரித்தல்; வாதுசெய்தல்.
 
     அழிந்தது - வாதில் தோற்றதனை; இரண்டனுருபு விரிக்க; மற்று -அசை; மற்று
- மறுத்தப் பகைத்த என்றலுமாம். இப்பொருளில் மற்று என்பது ஈற்றகரங்கெட்ட
தென்க; கூர்த்த - கூரிய; நுதி - முனை; நுதிவைத்தல் - நுனியில் தைக்க ஏற்றுதல்;
நுதிவைத்த - “கழுவேற்றுக” என்று அரசாணை செய்த; வார்த்தை - புகழ்ச்சொல்;
பண்டு - முன்னாளில்; உரியது என்பது குறிப்பெச்சம்.
 
     பெயரும் வரலாறும் பண்பும் திருத்தொண்டும் வகைநூல் வகுத்தது.
 
     விரி: 4069. (இ-ள்) தடுமாறு.......என்று - தடுமாற்றத்தை விளைக்கும் புரை
நெறியினையே தவமென்று கொண்டு; தம் உடலை....அகப்பட்டு - தமது உடலை
வருத்துகின்ற செயல்களைச் செய்து தீநெறி ஒழுகும் அமணரது சூழ்ச்சியினுள்
அகப்பட்டு; விடுமாறு.....அடைந்த - அவ்வலையினின்றும் விடுபடும்படி தமிழ்விரகராகிய
ஆளுடைய பிள்ளையாரது, வினைமாற்றிப் பிறவியறுக்கும் திருவடிகளை அடைந்த;
நெடுமாறனார்...நிகழ்ந்தது - நெடுமாறனாரது பெருமையானது ஏழு உலகங்களிலும்
நிறைந்து விளங்கியது; ஆல் - அசை.
 
     (வி-ரை) தடுமாறு நெறி - தடுமாற்றத்தை விளைக்கும் நெறி; தவமென்று.......ஒழுகும் - பலவாறும் உடலை வருத்துதலே தவமாமென்னும் அமணர்
கொள்கையும் ஒழுக்கமும்; அடுதல் - சுடுபாறைகிடத்தல் - வெயிலினிற்றல் முதலாயின.
 
     விடுமாறு - விட்டு நீங்கும்படி.
 
    வினைமாறும் கழல் - மாற்றும் என்னும் பிறவினை மாறும் எனத்தன்வினையாய்
வந்தது; “கழறொழ நினைப்பவ ரிருவினைத்துயர் போமே” “பிறவியென்னும் பொல்லாப்
பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி” (நம்பியாண்டார் நம்பிகள்).
 
     நிகழ்ந்தது - விளங்கியது.                                      1
 
4070. அந்நாளி லாளுடைய பிள்ளையா ரருளாலே
தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச்
சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக்கொண்ட
பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார்,                2
 
4071. ஆயவர சளிப்பார்பா லமர்வேண்டி வந்தேற்ற
சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப்
பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங்
காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்,                   3
 
4072. எடுத்துடன்ற முனைஞாட்பி னிருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும் பாய்மாவி னறுகுறையும்