தயங்குதல் - விளங்குதல். |
எனமூள - என்பதும் பாடம். 5 |
4047. (வி-ரை) தீ - படைகள் மோதுதலால் தீப்பொறி பறக்கும் என்பது; தீ உமிழும் - தீப்போன்று ஒளிவிளங்கும் என்றுமாம். |
படைவழங்குதல் - படைகளை ஏவிப் போர்புரிதல். |
முருக்கும் - வெட்டப்பட்ட; உடல்தோயும் நெடுங்குருதி - குறை உடல்கள் அங்கு வடிந்து நின்ற இரத்தப்பெரு மடுவில் தோய்ந்துகிடந்தன என்பது. Body lay in a pool of blood என்பர் நவீனர். |
குருதி மடுக்குளித்து - இரத்தமாகிய மடுவிற் குளித்து. |
நிணம் துய்த்து - நிணத்தினை உண்டு; நிணம் - இறைச்சி; ஆடி - கூத்தாடி; இவை போர்க்களத்திற் கூடும் பேய்களின் செயல்களாகக் கூறப்படுவன, “சூர் முத றடிந்த சுடரிலை நெடுவேல்.....துணங்கை தூங்க” என்ற திருமுருகாற்றுப் படைப்பகுதியும், பரணி நூல்களில் பேய் - காளி - பூதம் முதலியவற்றைப்பற்றி உரைப்பனவும் இங்குக் கருதத்தக்கன. |
போயபருவம் - முன்காலத்தில்; பணிகொள் பூதங்களேயன்றி - நெல்வேலிப் போரில் வடபுலமன்னரின் விறலினை நோக்கிப் பாண்டியன் சிவனை நினைய, நெல்லையப்பர் ஏவலினால் சிவபூதகணங்கள் வந்து பகைவரை அழித்தன என்பது தலபுராண வரலாறு. |
உணவு அளித்த தென - பேய் பூதங்களுக்கு விருந்து அளித்தது என்று சொல்லும்படி. |
பிறங்குதல் - விளங்குதல். 6 |
4075. (வி-ரை) நெடுஞ்சமர் - கொடுமையாலும் காலத்தாலும் நீண்ட போர். |
பனைநெடுங்கை மதயானை - 'பனைக்கை மும்மத வேழம்’ (அரசு - தேவா) |
இகலுழந்த - போர்புரிந்த; பறந்தலை - போர்க்களம். |
பஞ்சவனார் - பாண்டியரது; ஆறனுருபு விரிக்க. |
முனை அழித்த - போரில் தோற்ற; முதன் மன்னர் - முதன்மை பெற்ற அரசர்; முதன்மையாவது படை வீரம் முதலியவற்றால் மேம்படுதல்; சரிதல் - அழிந்து சிதைதல்; இறத்தல்; முதன்மன்னர் - முதன் மன்னராயிருந்தும் அவர் படை சரிய என்று இழிவு சிறப்பும்மை விரிக்க. |
புனையும் நறும்தொடை வாகை - புனையும் - வெற்றி பெற்றோர் புனைதற்குரிய வாகைத்தொடை என்க. வாகை மாலை சூடுதல் வெற்றிக்குறி; வாகை - வெற்றிமாலை. |
பூழியர் வேம்பு - வேப்பமாலை பாண்டியர்க்குரியது பூழியர் - பாண்டியர். 7 |
4076. (வி-ரை) வளவர்பிரான் - சோழ அரசருக்கு; நான்கனுருபுவிரிக்க. “வளவர்கோன் பாவை” (தேவா). |
மங்கையருக்கரசியார்.....கவுரியனார் - கவுரியனார் - நெடுமாற பாண்டியர்; மங்கையர்க்கரசியாரது கணவனார் என்றபடி; “முத்தின்றாழ் வடமுஞ் சந்தனக் குழம்பு நீறுந்தன் மார்பினின் முயங்கப், பத்தியார் கின்ற பாண்டியமா தேவி” (தேவா). |
இளஅரவு வெண்பிறை - இள அரவினையும் வெள்ளிய பிறையினையும் என்க. எண்ணும்மைகள் தொக்கன. “இள நாகமொ டேனம்” (தேவா). அரவு, அர அரா - என்பன ஒரு சொல். |