உணரும் ஒளிவிளக்குச் சுடர் - உணர்வு - ஞானம்; “ஒண்சுடர் ஞான விளக்கினை யேற்றி” (தேவா); “அறிவா மொளிவிளக் கேற்றி; வகைநூல். |
இறவாத ஆனந்தம் - ஏனைய ஆனந்த மெல்லாம் ஒருகாற் கெட்டொழிவனவும் கேடுதருவனவுமாம்; சிவானுபவமாகிய ஆனந்தமொன்றே கெடாதது. இறவாத இன்ப அன்பு வேண்டி.” (1776) |
அறவாணர் - சிவன்; அன்பே - அமுதமாகக் கொண்டு; “மெய்ததன்மை யன்பு நுகர்ந் தருளுதற்கு” (3684) என்பன முதலியவை பார்க்க. “அன்பெனு மெய் யமிர்தம்” - வகைநூல். |
அர்ச்சனை செய்வார் - பூசிப்பாராய்; முற்றெச்சம். |
அமைத்தல் - பாவித்தல்; அகப் பூசைக்குரிய மலர்களை வகைநூல் வகுத்தமை காண்க. மறவாத வாய்மையால் - என்பதும் பாடம். 8 |
4087. (வி-ரை) அகமலர்ந்த அர்ச்சனையில் - வழிபாடு - அகப்பூசை; நிகழவரும் - விளங்க வருகின்ற; |
ஒழியாமே - நீங்காமல்; எப்போதும். |
புகல் - புகுமிடமாக; தஞ்சமாக; நிலைபெற்ற இருப்பிடமாக. புகலமைத்து - புகுதலைப் பொருந்தி; |
அடிநிழற்கீழ்த் தொழுதிருந்தார் - திருவடியில் சேர்ந்திருந்தார்; திருவடிமறவாது இடையறாத சிவபோகத்தில் தொழுதிருத்தலே வீடுபேறாம். |
9 |
4088. | நீராருஞ் சடையாரை நீடுமன வாலயத்துள் ஆராத வன்பினா லர்ச்சனைசெய் தடியவர்பாற் பேராத நெறிபெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச் சீராருந் திருநீடூர் முனையடுவார் திறமுரைப்பாம். 10 |
(இ-ள்) நீராரும்.....அர்ச்சனை செய்து - கங்கையாறு நிறைந்த சடையினை உடைய சிவபெருமானைத் தமது நீடும் மனக்கோயிலினுள் தாபித்து மிக்க அன்பினாலே பூசித்து; அடியவர்பால்.....போற்றி - அடியவர்களுடனிருந்து நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாராகிய வாயிலார் நாயனாரைத் துதித்து அத்துணையாலே; சீராரும்....உரைப்பாம் - சிறப்புப் பொருந்திய திருநீடூரில் வாழ்ந்த முனையடுவார் நாயனாரது திறத்தினைச் சொல்வோம். |
(வி-ரை) சரித முடிபும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று. |
மனவாலயத்து...அருச்சனைசெய்து - இந்நாயனார் செய்த அகப்பூசையின் சாரம். |
அடியவர்பால்....நெறி - முன்னே வீடுபெற்ற அடியவர் கூட்டத்தினின்று நீங்காது உடனிருக்கும் பேறு. |
திரு நீடூர் முனையடுவார் - ஊரும் பெயரும் உரைத்துத் தோற்றுவாய் செய்தவாறு. |
சரிதச் சுருக்கம்: வாயிலார் நாயனார் புராணம் :- தொண்டை நாட்டில் திரு மயிலாபுரிப்பதியில் வேளாளர் மரபில் வாயிலார் குடியில் தோன்றியவர் வாயிலார் நாயனார்; அவர் இறைவருக்கு மனமாகிய கோயிலும், அறிவாகிய விளக்கும், ஆனந்தமாகிய திருமஞ்சனமும், அன்பாகிய திருவமுதும் அமைத்து நாடோறும் வழுவாமே அகப்பூசை செய்வார். இவ்வாறு நெடுநாட் செய்திருந்து சிவனடி நிழலில் அடியாருடனே இருக்கப் பெற்றனர். |