பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்396

     கொடுத்தனன் - என்று விளம்புவர் - என்று இயையும். இப்பாட்டுப் பூட்டுவிற்
பொருள்கோள். விளம்புவர் என்றதற்கு எழுவாய் அறிந்தோர்கள் என்பது அவாய்
நிலையான் வந்தது. அமருள் அழிந்தவர்க்காக - போர் வலியின்மையாற்
றோல்வியுற்றவர்கள் பக்கம்; எளியார் பக்கம் சேர்ந்து உதவுதல் ஒரு தருமமாம்; கூலி
ஏற்று - அதற்காகத் தமக்குக் கூலி நிதியம் பெற்று; எறிந்து - சென்று போர்செய்து;
வென்றபெருஞ் செல்வம் - வெற்றி கொண்டு அதனால் வந்த பெரிய செல்வம்; வென்ற
- வென்ற காரணத்தால் பெற்ற என்க; ஆறு சென்றவியர் - வந்த இளைப்பு - என்புழிப்
போலக்கொள்க. இவ்வாறு கூலி ஏற்கும் செயலில் அக்கூலியே பெரிதென்று
கொள்ளாமல் நடுவு நிலை வைத்து நீதி முறையினைத் தெரிந்தே அவர்பக்கம் ஏற்றனர்
என்பது விரிநூலுட் காண்க. (4081); தமர் - அடியவர்கள்; தொழிலும் அடிமைப் பண்பும்
பெயரும் வகைநூல் வகுத்தது.
 

     விரி :- 4089. (இ-ள்) மாறு.....திருநாட்டு - பகைமையை வென்று உலகினைக்
காக்கும் சோழர்களது காவிரிபாயும் திருநாட்டில்; நாறு.....தேன் - கமழ்கின்ற
மணமுடைய சோலைகளின் மலரரும்புகள் விரிந்து பொழிகின்ற செழுந்தேன்;
ஆறு.......கமழும் - ஆற்றின் வழியே பெருக்கெடுத்து அவ்வெள்ளத்தினால் சேறு செய்த
வயலினுள் உழவர்கள் உழுகின்ற சேறும் நறு மணம் கமழ்கின்ற; செல்வ நீடுர் திருநீடூர்
- செல்வம் நீடியுள்ள ஊராகும் திருநீடூர் - என்பது.
 
     (வி-ரை) மண்காத்த - அரசாளும் எனத் தன்மை குறித்தது. மாறு - வேற்றரசரது பகை.
 
     செல்வம் நீடுஊர் திருநீடூர் - திருநடூர் என்ற பதியின் பெயர்ப்பொருள்
விரிக்குமாற்றால் நகரச்சிறப்பும் உடன் கூறியவாறு; முன்னர்த் “திருவாமூர் திருவாமூர்”
(1277), “கமழ்சாறூர் கஞ்சாறூர்” (866) என்பன முதலியவை போலக் காண்க. செல்வம்
- என்றது இங்கு நீரின் வளத்தாற் சோலைகளின் செழிப்பும் வயல்களின் செழிப்பும்
பிறவுமாகிய உலகவளம் பற்றிக் கூறப்பட்டது.
 
     ஆறுபெருகி - ஆறுபோலப் பெருகி; ஆற்று நீரினுள் சேர்ந்து பெருகி
என்றலுமாம்; நனை - அரும்புகள். வாய்திறத்தல் - அலர்தல்; வாய்திறந்து பொழி
செழுத்தேன்
- தேன் பெய்து மூடிய குப்பிகளின் வாயினைத் திறந்து பொழிவது போல
என்ற குறிப்பும் காண்க. நாறு விரை- விரைநாறும்.
 
     அள்ளல் வயல் - சேற்றினையுடைய வயல்கள்; சேறு - சேறும் என்று இழிவு
சிறப்பும்மை தொக்கது; எரு முதலிய பொருள்கள் தோய்ந்து அழுகுதலால் தீ நாற்றங்
கமழவேண்டிய சேறும் அதற்கு மாறாகச் சோலைத் தேன்கலந்த நீர்பாய்வதனால்
நறுவாசங் கமழ்கின்றது என்பதாம். செல்வம் நிறைந்த ஊரானது திருநீடூராம் என்க.
 
     வெள்ளமிகும் - நீர்வெள்ளம் பாய்ந்து தங்கும்; மள்ளர் - உழவர்.          1
 
4090. விளங்கும் வண்மை மிக்குள்ள வேளாண் டலைமைக் குடிமுதல்வர்
களங்கொண் மிடற்றுக் கண்ணுதலார் கழலிற்செறிந்த காதன்மிகும்
உளங்கொ டிருத்தொண் டுரிமையினி லுள்ளார்; நாள்ளார் முனையெறிந்த
வளங்கொ டிறைவ ரடியார்க்கு மாறா தளிக்கும் வாய்மையார்,               2
 
4091. மாற்றார்க் கமரி லழிந்துள்ளோர் வந்து தம்பான் மாநிதியம்
ஆற்றும் பரிசு பேசினா லதனை நடுவு நிலைவைத்துக்