பக்கம் எண் :

பெரியபுராணம்397

  கூற்று மொதுங்கு மாள்வினையாற் கூலி யேற்றுச் சென்றெறிந்து
போற்றும் வென்றி கொண்டிசைந்த பொன்னுங்கொண்டு மன்னுவார்
 

4092.   

இன்ன வகையாற் பெற்றநிதி யெல்லா மீச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போனகமுங்
கன்ன னறுநெய் கறிதயிர்பால் கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னு மன்பி னெறிபிறழா வழித்தொண்டாற்றி வைகினார்.               4
 
     4090. (இ-ள்) விளங்ளகும்....முதல்வர் - விளக்கம் பொருந்தியம வள்ளற் றன்மை
மிகுந்துள்ள வேளாளர் மரபில் தலைமையாகிய குடியில் முதல்வராய்;
களங்கொள்.....உள்ளார் - விடத்தினைக் கொண்ட கழுத்தையுடைய கண்ணுதலாகிய
சிவபெருமானது திருவடியிற் செறிவுடைய பெருவிருப்பம் மிகவும் மனத்துட் கொண்ட
திருத்தொண்டுரிமை பூண்டுள்ளாராய்; நள்ளார்.....வாய்மையார் - நட்பில்லாதாரைப்
போரில் வென்றதனால் வரும் வளங்களாகிய ஊதியத்தினைக்கொள்டு இறைவரைது
அடியார்களுக்கு மாறாமல் அளிக்கும் வாய்மையினை யுடையவராய்,               2 
                            
 
     4091. (இ-ள்) மாற்றார்க்கு...பேசிகால் - (போரில்) பகைவர்களுக்குத்
தோற்றவர்கள் வந்து தம்மிடம் பெருநிதியம் கொடுத்து தமது துணையைக்
கொள்ளும்பரிசு பேசினால்; அதனை நடுவு நிலைவைத்து - அதனை நடுநிலையின்
நின்று அறநெறியினை ஆய்ந்து துண்ந்; கூற்றும்...எறிந்து - இயமனும்அஞ்சி ஒதுங்கம்
போர் முயற்சி யினாலே கூறிலினை ஏற்றுப் போய்ப் போர் வென்று;
போற்றும்....மன்னுவார் - யாவரும் போற்றும் வெற்றியினை அடைந்து இசைந்த
கூலியாகயி பொன்னையும் கொண்டு நிலைபெற வார்வாரராகி,                    3
 
     4092. (இ-ள்) இன்ன வகையால்.....கொடுத்து -இவ்வகையினாலே பெற்ற நிதிகள்
எல்ாாவற்றையும் சிவனடியார்கள் சொன்ன சொன்னபடியே கொடுத்து; தூய...அறித்து -
தூய்மையாகிய திருவமுதும் சர்க்கரை - நளுமணமுள்ள நெய் - கறி - தயிர் - பால் -
கனி - என்றிவையுள்ளிட்டனவாகியவற்றையும் கலந்து திருவமுது அளித்தும்;
மன்னும்.......வைகினார் - நிலைபெரும் அன்பின் நெறியிற் பிறழாத வழித்தொண்டினைச்
செய்து வாழ்ந்தார்.                                                      4
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.
 
     4090. (வி-ரை) வண்மை மிக்குள்ள வேளாண் - “வேளாள ரென்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்கும், தாளாளர்” (தேவா - ஆக்கூர் - 3); வண்மை -
வள்ளன்மை - ஈதை. இது வேளாளரின் சிறப்பியல்பு.
 
     வேளாண் தலைமைக்குடி - வேளாளமரபிலே பல குடிகளுள்ளும் தலைமை
பெற்ற குடியில்; முதல்வர் - முதன்மை பெற்றவர்; நாண்டாண்மை என்பது வழக்கு.
 
    காதல்மிகும் உளங்கொள் திருத்தொண்டு-திருத்தொண்டு பெருவிருப்பத்தினை
மனத்துக்கொண்டு செய்யத்தக்கது என்பதாம்.
 
     திருத்தொண்டு உரிமையினில் உள்ளார் - திருத்தொண்டினைத் தமது
உரிமையாகக் கொண்டவர்.
 
     நள்ளார் முனை எறிந்த வளம் - நள்ளார் - பகைவர்; தம்மிடம் வந்து பரிசு
வேண்டினோரின் பகைவர்; முனையயெரிதல் - போர் வெல்லுதல்; எறிந்த வளம் -
எறிந்ததனால் பெற்றவளம்; கூலியாகிய நிதியம்.