மாறாது - பிறழாது எந்நாளும். |
முதல்வர் -உள்ளார் - வாய்மையார் - மன்னுவால் (4091); கொடுத்து - அளித்து ஆற்றி - வைகினார் (4092) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி முடிபு கொள்க. 2 |
4091. (வி-ரை) மாற்றார்க்கு அமரில் அழிந்துள்ளோர்....பேசினால் - போலிரல் பகைவர்க்கு உடைந்து தோல்வுயுற்றவக்ள் தம்பால் வந்து தமது துணையை வேண்டிய அதற்குக் கூலியாக மாநிதியம் தருவதாகப் பேசினால்; மாநிதியம் - “பெருஞ் செல்வம்” வகைநூல். |
நடுவுநிலை வைத்து - அறநெறியிற் சீர் தூக்கி; கூலிக்காகவே எதனையும் இசைவது என்றில்லாமல் என்பதாம். |
கூற்றும் ஒதுங்கும் ஆள்வினை - கூற்று; இயமன்; ஆள்வினை - முயற்றி; இங்குப் போர்த்தொழில் குறித்தது. உம்மை உயர்வு சிறப்பு. “கூற்றொத்தீயே” (புறம்) |
கூற்றம் ஓதுங்கும் ஆள்வைனையாவது கூற்றுவான் எவ்வகை வலியாரையும் உயிர்பிரித்தலில் வல்லவன். ஆனால் உரிய காலத்தாலன்றி அது செய்தல் இயலாது; இவர் அவன் போலவே எவ்வகை வலியோரையும் உயிர் பிரித்தலில் வல்லவர்; அதனுடைய எந்நாளிலும் அது செய்ய வல்லாந்தன்மையினை ஆள்வைனையாற் பெற்றார்; இது கண்டு கூற்றகூனும் அஞ்சி ஒதுங்குவன் என்பதாம். “ஊழையு முப்பக் கங் காண்ப ருலைவின்றித், தாழா துஞற்று பவர்” (கறள்). |
கூலி - என்பது தமது முயற்சிக்காகப் பெறும் ஊதியம் என்ற உணர் பொருளில் வந்தது; எவ்வகை ஊதியமும் கூலியே என்னும் இது பொருளியல் நுல் உண்மைக் கருத்து; |
எறிந்து - போர் வென்று; “கூலியேற்றெறிந்து” வகை நூலாட்சி. |
இசைந்த பொன் - கூலியாக இசைந்த நிதியம்; பொன் - அந்நாளில் வழங்கிய பொன் நாணயத்தால் அளவிட்ட தொகை; மன்னுவார் - நிலைபெற்ற உலக வாழ்வினை நடத்துவாராய். 3 |
4092. (வி-ரை) சொன்ன சொன்னபடி - அவர்கள் திருவுளங்கொண்டு விரும்பிக் கேட்டவாறே - ஒன்றம் குறையாமல் - அடுக்கு உறுதிப்பொருள் தந்து நின்றது. கன்னல் - சர்க்கரை. |
கொடுத்து - அளித்துத் - தொண்டாற்றி - என்க. பொன்தருதல் ஈகை - கொடையின் பாற்படுதலின் கொடுத்து என்றார்; அளித்து - அமுதூட்டி; இது அளி - கருணையுடன் செய்யத்தக்கதாதலின் அளித்த என்றார். |
அன்பின் நெறிபிறழா வழித்தொண்டு - பிறழாமை - வழுவாமை; வழி - வழி வழி வருவது. பரம்பரை என்பர். |
வைகினார் - வாழ்ந்தனர். 4 |
4093. | மற்றிந் நிலைமை பன்னனெடுநாள் வைய நிகழச் செய்துவழி யுற்ற வன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் றிருவருளாற் பெற்ற சிவலோ கத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற வுழந்த முனையடுவா ரென்னு நாம முன்னுடையார். 5 |
(இ-ள்) மற்று.....நெறியால் - முன் கூறிய இந்த நிலையிலே திருத்தொண்டினைப் பல நெடுங்காலம் உலகில் விளங்கும்படி செய்து வழிவழி வந்த அன்பினாலாகிய செம்மை நெறியினாலே; உமையாள்.....மருவினார் - உமையம்மையாரின் கண |