வனாராகிய சிவபெருமானது திருவருளினாலே அடையப் பெற்ற சிவலோகத்தில் அமர்ந்து மீளாத உரிமையினைப் பொருந்தினார்; முற்ற.......முன்னுடையார் - வெற்றி பொருந்தப் போர் செய்த காரணத்தால் முனையடுவார் என்னும் திருப்பெயரினைச் சிறக்க வழங்கப்பெற்ற பெரியார். |
(வி-ரை) இந்நிலைமை - முன் கூறிய இந்த நிலையையுடைய திருத்தொண்டினை; வழி உற்ற அன்பின் செந்நெறி - வழிவழி பொருந்திய அன்பினாலாகிய செம்மை நெறி - சிவநெறி. |
பிரியா உரிமை - எனறும் மீளாத தன்மை; சிவலோகத் தமர்ந்து பிரியா உரிமை - சாலோகப் பதவி. |
முற்ற உழந்த - முற்றுதல் - போர் வென்று கடத்தல்; உழத்தல் - முனைந்து போர் புரிதல்; உழந்த - உழத்தலால். |
உழந்த முனையடுவார் என்னு நாமம் - இப்பெயர் காரணத்தால் வந்தது; முன்னுடையார். முன் - சிறப்பாக; இவரது இயற்பெயர் இஃதன்று என்பது; இதனாலே இவரது பெயரை இப்புராணத்துள் முன்னே ஆசிரியர் கூறவில்லை. 5 |
| 4094. | யாவ ரெனினு மிகலெறிந்தே யீச னடியார் தமக்கின்ப மேவ வுளிக்கு முனையடுவார் விரைப்பூங் கமலக் கழல்வணங்கித் தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோன் முறைபுரியுங் காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டி னிலைமை கட்டுரைப்பாம். 6 |
(இ-ள்) யாவரெனினும் இகல் எறிந்தே - எதிர்ப்பவர் யாவரே யாயினும் போரில் வெற்றி கொண்டே (அவ்வூதியங்களை); ஈசன்.....வணங்கி - இறைவனடியவர்களுக்கு இன்பம் பொருந்த அளிக்கும் முனையடுவார் நாயனாரது மணம் பொருந்திய பூங்கமலக் கழல்களை வணங்கி, (அத்துணையாலே); தேவர் பெருமான்....கட்டுரைப்பாம் தேவர் தலைவராகிய சிவனது நெறியினை உலகில் விளங்கும்படி செங்கோல் அரசு புரியும் காவல் பூண்ட கழற்சிங்க நாயனாரது திரத்தொண்டின் நிலைமையினைச் சொல்கின்றோம். |
(வி-ரை) இது இச்சரித முடிப்பும் மேல் வருஞ் சரிதத்தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று, யாவரெனினும் - எத்தகைய வல்லமையுடையோராயினும். கூலி பேசி அமர் ஏற்றபின், எதிர்ப்பவர், தமக்கு நட்பு உறவு முதலிய எவ்வகையால் தொடர்புடையோராயினும் பாராது என்ற குறிப்புமாம். |
இகல் எறிந்து - போர் வென்று; இகல் - போர் ; எறிதல் - வெற்றி பெறுதல்; |
கழல் - தானியாகு பெயராய்த் திருவடியை உணர்த்திற்கு. சிறந்த வீராதலால் கழல் கூறினார். |
யாவரெனினும்...அளிக்கும் - இச்சரிதசாரம். |
சைவ நெறிவிளங்க - முறைபுரியும் - வருஞ்சரித உள்ளுறையாகிய தோற்றுவாய். சைவம் சிறந்தோங்கும் பொருடடு அரசாட்சியை மேற் கொண்ட; |
| செங்கோல் முறைபுரியும் காவல் - அரசாட்சி. 6 |