பக்கம் எண் :

கறைக்கண்டன் சருக்கம்400


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
 

சுந்தரமூர்த்தி நாயனார் துதி
_ _ _ _ _
 

தொகை
 

  
“ஆருர னாரூரி லம்மானுக் காளே”

- திருத்தொண்டத் தொகை - 8
 

வகை
 

  
“கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரென்று புக்கொளியூர்த்
தொடுத்தான் மதுர கவியவி நாசியை வேடர் சுற்றம்
படுத்தான் றிருமுறு கன்பூண் டியினிற்ப ராபாத்தேன்
மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே.”

- திருத்தொண்டர் திருவந்தாதி - 63
 

விரி
 

4095.    செறிவுண் டென்று திருத்தொண்டிற் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறியுண் டொன்று கிலுங்குறைவொன் றில்லோ நிறையுங் கருனையினால்
வெறியுண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்கப்
பறியுண் டவரெம் பழவினைவோர் பறிப்பா ரென்னும் பற்றாலே.          7
 
     தொகை: ஆரூரனாகிய யான் திருவாரூரில் அம்மானுக்கு ஆளானேன்.
 
     வகை: அன்று....அவிநாசியை - முன்னாளில் புக்கொளியூரில் எழுந்தருளிய
அவிநாசியாகிய இறைவரை மதுரம் பொருந்திய பாடல் தொடுத்தார்; (அதனால்);
கொடுத்தான்.....உயிர் - முதலையினாற் கொள்ளப்பட்ட பிள்ளைக்கு உயிர் கொடுத்து
மீளவரச் செய்தார்; வேடர்....திருமுருகன் பூண்டினியில் - திருமுருகன் பூண்டினியில்
வேடர்களாகிய கணங்களாற் சூழப்பட்டுப் பறிபடுத்தார்; பராபரத் தேன்மடுத்தானவன் -
பராபரனாகிய தேனை வாய்மடுத்து உண்டவர்; வன்றொண்டனாகின்ற மாதவனே
என்பர் - வன்றொண்டன் என்னும் மாதவரே யாவர் என்று அறிஞர் கூறுவர்.
     இப்பாட்டுக் கொண்டு கூட்டுப் பொருள்கோள். புக்கொளியூர் - ஊர்ப் பெயர்;
அவிநாசி - அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவர் பெயர்; “புக்கொளியூ ரவிநாசியே”
(தேவா); மதுரகவி - தேவாரப்பதிகம்; தொடுத்தானாதலின் அத்துணைகொண்டு உயிர்
கொடுத்தான் என்க. “முன்னாள் நாவலர் பெருமான், பண்