பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)4

பாரக் கடகரி - என்றது கரியினது உயர்வும் பெருஞ் சிறப்பும், தன்பந்தி இவுளி -
என்றது அதனை நோக்கக் குதிரையினது எளிமையும் குறிக்க நின்றன. முறையே
உயர்வும் இழிவுமாகிய சிறப்பும்மைகள் தொக்கன. “சிரமலியானை” (தேவா.) வீரற்கு -
வீரத்தின் காரணங் காட்டியவாறு; கருப்பு வில்வீரன் - மன்மதன்; வென்றி - வீரனை
- வெற்றிகொண்ட சூரன் - ஏனையோர்பால் வெற்றி கொள்வானாயினும் இவர்பால்
தோல்வி யுற்றனன் என்பது; தேவியர்பால் வைத்த பெண் ஆசையையும், மண்
ஆசையையும் துரந்து தோழருடன் குதிரையில் சென்றருளிய நிலையும், சிவயோக
நிலையினராகும் தன்மையும் குறித்தது; சூரன் - பெருவிறலுடையோன்.
 

     கொடையின் தன்மையாகிய பண்பும் பேரும் முதனூல் பேசிற்று;
அடிச்சேரனென்றதும், கரிமுன்பு இவுளி வைத்தலும், ஆகிய வரலாறுகளும், கருப்புவில்
வீரனை வெற்றிகொண்ட பண்பும் பேரும் வகைநூல் வகுத்தது. இவை விரிந்தவாறு விரி
நூலுட் கண்டுகொள்க.
 

     விரி:- 3748. (இ-ள்) மா...மலைநாட்டு - திருமகள் வீற்றிருக்கும் பெரிய
சிறப்பினுள் நிலைபெற்ற பழமையினை யுடைய மலைநாட்டிலே; பா....பதிதான் -
பழந்தமிழ்ப் பாட்டுக்களிலே விளங்கிய பல புகழ்களையுடைய சேர அரச மரபினரும்
குடிகளும் தொன்றுதொட்டுப் பயின்று வரும் இயல்பினையுடைய பழம் பதியாவது;
சே....நிலவி - இடபத்தில் எழுந்தருளிய சிவபெருமானது திருவஞ்சைக் களத்துடனே
நிலவப்பெற்று; சேரர் குலக்கோ....கொடுங்கோளூர் - சேரமரபின் அரசர்கள் அரசு
கட்டிலேறியிருந்து வழிவழி அரசாட்சி செய்துவரும் பெரிய தலைநகரமாவது
கொடுங்கோளூர் என்பதாகும்.

 

     (வி-ரை) மா - திருமகள்; மாவீற்றிருந்த - திருமகள் விளக்கத்துடன் இருந்த;
தொன்மை - “பரசிராமன் பெறுநாடு” (491);
 
     பா வீற்றிருந்த பல்புகழார் - பா - பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், புறநானூறு
முதலிய சங்கம் மருவிய பழந்தமிழ்ப் பாட்டுக்கள்; பா வீற்றிருந்த பல்புகழாவது
சங்கப்பாட்டுக்களில் சேரமன்னர்களது கொடைத் தன்மை பேசப்பட்ட திறம்;
பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றியே பாராட்டுவது; சிலப்பதிகாரம் -
சேரமரபின் இளங்கோ அரசரால் பாடப்பட்டது; சேரன் செங்குட்டுவனது சிறப்பைச்
சிறப்பாய்ப் பேசுவது; புறநானூற்றில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் -
மாந்தரஞ்சேர லிரும்பொறை முதலாகப் பாடப்பட்ட சேர மன்னர்கள் பலர்; இவற்றுள்
சேர மன்னர்களின் பல்புகழ் விளங்கும்; புகழாவது பெரும்பான்மை ஈகைத்திறம்
பற்றியதாம். “உரைப்பா ருரைப்பவை யெல்லாம்...ஈவார்மே னிற்கும் புகழ்” (குறள்);
“போந்தை ஆரே வேம்பென வரூஉம்” (தொல்) சேரரது தொன்மையும் முதன்மையும்
குறித்தது.
 
     பதிதான் - திருவஞ்சைக் களமும் நிலவி - கொடுங்கோளூர் -
திருவஞ்சைக் களமும் கொடுங்கோளூரும் சேர்த்து ஒரே பதியாகக் கொண்டு
வழங்கப்படுதலின் பதிதான் என ஒருமையாற் கூறினார்; “அஞ்சைக்களங்
கொடுங்கோளூர்” என்று தேவாரத்துட் சேர்த்துப் போற்றப்பட்டது காண்க. அரசரது
தலைநகரமும் அவர்களது வழிபடு கோயிலும் கூறியவாறுமாம். சேவீற்றிருந்தார்
திருவஞ்சைக்களம்
என்றும், கோ....மூதூர் - என்றும் கூறிய அடைமொழிகளின்
கருத்துமிது; “அரசர் தொழில் புரியார், தெண்ணீர் முடியார் திருவஞ்சைக் களத்திற்
றிருத்தொண்டே புரிவார்” (3754) என்பதும் இக்கருத்துடையது. குலம் - மரபு; முறை
புரியும்
- அரசாட்சி