(4) வேளாளர்கள் போர் உரிமையும் வன்மையும் உடையவர். |
தலவிசேடம்: திருநீடுர் - சோழநாட்டுக் காவிரி வடகரை 21 - வது பதி; வருளாரணியம் - மகிழவனம் எனப்படும். ஊழியிலும் அழியாது நீடியிருத்தலின் இப்பெய ரெய்தியது; இந்திரன், சூரியன், சந்திரன், பாதகத்தால் நண்டுருவடைந்த தன்ம சுதன் என்னும் வேதியன், ஆலால சுந்தரி (காளி) இவர்கள் பூசித்துப் பேறு பெற்றது; ஆளுடைய நம்பிகள் இங்குப் பணியாது செல்லும்போது திருவருளால் மீண்டுவந்து; “நீடூர் பணியா விடலாமே” என்ற பதிகம் பாடி வணங்கியது; சுவாமி மிகச் சிவந்த சோதிலிங்கத் திருமேனி; முனையடுவார் நாயனாரது தலம் - சுவாமி - அருட் சோமநாதர் - கானதீர்த்த சங்கரர்; அம்மை - வேயுறு தோளி யம்மை; அதிகாந்தியம்மை - தீர்த்தங்கள் சந்திரபுட்கரணி முதலிய ஒன்பது உண்டு. மரம் - மகிழ்; பதிகம் திருப்புன்கூறும் திருநீடூரும் என்ற பதிகம் 1. |
இது நீடூர் நிலயத்தினின்றும் வடமேற்கே மட்சாலை வழி ஒருநாழிகை யளவில் அடையத்தக்கது; மகமதியர்கள் அதிகமாகக் குடியேறியுள்ளார். |
முனையடுவார் நாயனார் புராணம் முற்றும். |
கறைக்கணடன் சருக்கம் முடிந்தது. |