பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்406

4097. காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம்
ஆடக மேரு வில்லா ரருளினா லமரிற் சென்று
கூடலர் முனைகள் சாய வடபுலங் கவர்ந்து கொண்டு
நாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கு நாளில்,                2
 

4098.

குவலயத் தரனார் மேவுங் கோயில்கள் பலவுஞ் சென்று
தவலரு மன்பிற் றாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி யென்ன மன்னுந் தென்றிரு வாரூ ரெய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங் கோயிலுட் பணியப்புக்கார்.           3
 
     4097. (இ-ள்) காடவர்....தாம் - காடவர் குலத்துப் பெரியாராகிய பெரிய
கழற்சிங்கனார்; ஆடக.....கொண்டு - பொன்னாலாகிய மேருமலையை வில்லாகவுடைய
இறைவரது திருவருளினாலே போர் முகத்துப் போந்து, பகைவர்கள் போரில் அழிய,
வடபுலத்தவர்களது நாடுகளைக் கைக்கொண்டு; நாடு.....நாளில் - நாடு நீதி நெறியிலே
வைகும்படி நன்னெறியினை வளர்த்து அரசாளுகின்ற நாளிலே;               2
       
 
     4098. (இ-ள்) குவலயத்து......செய்வார் - இந்நிலவுலகத்திற் சிவபெருமான்
பொருந்தி விளங்கும் திருக்கோயில்கள் பலவும் சென்று பிறழாத அன்பினால் வணங்கி
உண்மைத் திருத்தொண்டுகளைச் செய்வாராகி; சிவபுரி......எய்தி - சிவநகர் என்னும்படி
நிலைபெற்ற தென்றிருவாரூரினைச் சேர்ந்து; பவமறுத்து.......புக்கார் - பிறவியினை
அறுத்து ஆளாகக் கொள்ளும் இறைவரது திருக்கோயிலுனுள்ளே புகுந்தனர்.    3
           
 
     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4097. (வி-ரை) காடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்”
என்பது முதனூல்; இம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது
“பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க. இவர்க்கு
மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக்
குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின்
ஆசிரியர் உமாபதி சிவனார்.
 
     பெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக்
காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில்
வைத்தார். கழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன்.
 
     அருளினால் அமரிற் சென்று - நாடு கொள்ளும் மண்ணாசையானன்றி அரச
நீதி முறையிற் சேரும் அருள் கூடியதனால்; அருளினால் கவர்ந்து கொண்டு என்று
மேலுங் கூட்டநின்றது; “அடிமலரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மை” (4096)
உடையாராதலின் அருள் வழியே போரில் முனைந்து நாடுகவந்தார் என்பதாம். இவர்
சிறந்த சிவபத்தர் என்பது பலவகையாலும் பெறப்படும் உண்மை.
 
     கூடலர் - பகைவர்கள் - சாளுக்கிய அரசர் நாடு என்பது கருதப்படும்.
சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பல நீண்ட ஆண்டுகள் பல போர்கள் நடந்தன
என்பது நாட்டு நடப்புச் சரிதத்தால் அறியவரும் உண்மை; வடபுலத்து வாதாவிப்
போரினைப் பற்றிச் சிறுத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும் காண்க.
 
     அறநெறி - உலகியல் நீதி; நன்னெறி - சிவநெறி; இரண்டும் உடன் வளர.  2