உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
54. இடங்கழி நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “மடல்சூழ்ந்த தார்நம்பி யீடங்கழிக்குத், “தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கும்’ அடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (9) |
வகை |
| சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன் “றிங்கட் சடையர் தமரதென் செல்வ” மெனப்பறைபோக் கெங்கட் கிறைவ னிருக்குவே ளிர்மன் னிடங்கழியே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (65) |
விரி |
4109. | எழுந்திரைமா கடலாடை யிருநிலமா மகண்மார்பில் அழுந்துபட வெழுதுமிலைத் தொழிற்றொய்யி லணியினவாஞ் செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின் கொழுந்துணர்கோ திக்கொண்டு குயினாடுங் கோனோடு. 1 |
புராணம் : முன் உரைத்தாங் குரைத்துக் கொள்க. |
தொகை : இதழ்களையுடைய மலர்மாலையணிந்த பெருமையுடைய இடங்கழி நாயனாருக்கும் (தஞ்சைச் செருத்துணையாரடியார்க்கும்) நான் அடியேன். |
தார் - சோழ அரசர்க்குரிய மாலை; மடல் - இதழ்; இங்கு இதழ்களையுடைய மலர்களுக்காகிவந்தது. நம்பி - ஆண்மக்களுட் சிறந்ததோர். |
வகை : சிங்கத்துருவனை......முகடு - நரசிங்க உருவெடுத்த திருமாலின் அகந்தையைப் போக்கிய இறைவரது பொன்னம்பலத்தின் முகட்டினை; கொங்கிற் கனகம்.....குல முதலோன் - கொங்கிற் பொன்னினால் வேய்ந்து அணிசெய்த ஆதித்தச் சோழரது வழிவழி முதல்வர்; திங்கட்கடையார்.....இறைவன் - என் செல்வம் சந்திரனை அணிந்த சடையினை உடைய இறைவரது அடியார்களுடையதே என்று பறைசாற்றுவித்தவராகிய எம்தலைவர்; இருக்குவேளிர்மன் இடங்கழியே - நிலைபெற்ற வேளிர் குலத்தில் வந்த அரசர் இடங்கழியா ரென்பவரேயாம். |
சிங்கத்து உருவன் - நரசிங்க உருவெடுத்த திருமால்; செறுதல் - ஈண்டுச் செருக்கடக்குதல் என்ற பொருளில் வந்தது. |