பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்416

தோணிபுரம் - 8]. துணர் - பூ என்றலுமாம்; “பானாறு மலர்ச்சூதப் பல்லவங்களவை
கோதி......மொழியுமெழி லிளங்குயிலே” (பிள் - தேவா - தோணிபுரம் ).
 

     மறைந்த பெடை களிப்பக் குயில் நாடும் என்று கூட்டுக; மறைந்த
பெட்டையைக் காணாது குயில் தேட அதுகண்டு பெடை, களிக்கின்றது; சிறுவர் காதலர்
விளையாட்டு வகைக் குறிப்பு. துணர் கோதிக் கொண்டு - என்பது தேடுதற்குத்
தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டு என்ற குறிப்பு. குயில் - ஆண் குயில்கள்;
 
     கோனாடு - இது புதுக்கோட்டையின் ஒரு பகுதி.
 
     பெடைக்களிக்க - என்பதும் பாடம்.                               1
 
4110.     முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் டிரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்.
குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்.               2
 
     (இ-ள்) முருகுறு........வாவி - மணங்கமலும் செந்தாமரைத் தேனை மலரில்
மொய்த்த வண்டுகள் பருகுதற்கிடமாகிய தெளிந்த அலைகளையுடைய வாவியில்; பயில்
பெடையோடு......மறைய - பொருந்திய பெண்பறவைகளோடு இறையினை உண்டு,
மோதிவரும் குளிர்ந்த வாடைக்காக மறைந்துறையும்படி; மாதவிச் சூழல் குருகு
உறங்கும் - குருக்கத்திச் சோலையில் குருகுகள் உறங்குகின்ற; கோனாட்டுக் கொடி
நகரம் கொடும்பாளூர் - கோனாட்டிலே கொடி நகரம் கொடும்பாளூர் என்ப தாகும்.
 
     (வி-ரை) நாட்டுவளமும் நகரச்சிறப்புங் குறித்தது இப்பாட்டு. தாமரை மலர்களின்
தேனை வண்டுகள் உண்கின்றன; அத் தடாகங்களில் குருகுகள் ஆணும் பெண்ணுமாகக்
கூடி இரையருந்தி வாடைக் கொதுங்கித் குருக்கத்திச் சோலையில் உறங்குகின்றன;
இவ்வாறு தடாகங்களும் சோலைகளும் சூழ வுள்ளது கோனாட்டின் கொடும்பாளூர் -
என்பதாம். அளிகள் கமலமது பருகுதல் இச்சரிதக் குறிப்பு.
 
     கொடிநகரம் - தலைநகரம்; இராசதானி. மாதவி - முல்லை விசேடமுமாம்.
 
     கொடும்பாளூர் - இது தலை நகரத்தின் பெயர்.
 
     மது - பருகுறும் - வாவி(யில்) என்க.
 
     செங்கமல மலர்மகரந்த - பெருகுறு தெண் - என்பனவும் பாடங்கள்.   2
                                         
 
4111. அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத் தரசளித்து
மன்னியபொன் னம்பலத்து பமனிமுகட்டிற் பாக்கொங்கின்
பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பா மிசையணிந்த
பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்,               3
 
4112. இடங்கழியா ரெனவுலகி லேறுபெரு நாமத்தார்
அடங்கலர்முப் புரமெரித்தா ரடித்தொண்டி னெறியன்றி
முடங்குநெறி கனவினிலு முன்னாதா ரெந்நாளுந்
தொடர்ந்தபெருங் காதலினாற் றொண்டர்வேண் டியசெய்வார்,           4
 
4113. சைவநெறி வைதிகத்தின் றருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார் மன்னியகோ யில்களெங்கும்