| மெய்வழிபாட் டர்ச்சனைகள் விதிவழிமேன் மேல்விளங்க மொய்வளர்வண் புகழ்பெருக முறைபுரியு மந்நாளில், 5 |
4114. | சங்கரன்ற னடியாருக் கமுதளிக்குந் தவமுடையார் அங்கொருவ ரடியவருக் கமுதொருநா ளாக்கவுடல் எங்குமொரு செயல்காணா தெய்தியசெய் தொழில்முட்டப் பொங்கியெழும் பெருவிருப்பாற் புரியும்வினை தெரியாது. 6 |
4115. | அரசரவர் பண்டாரத் தந்நாட்டி னெற்கூட்டின் நிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்ட காரத்தின் புரைசெறிநள் ளிருளின்கட் புக்குமுகந் தெடுப்பவரை முரசெறிகா வலர்கண்டு பிடித்தரசன் முன்கொணர்ந்தார். 7 |
4111. (இ-ள்) அந்நகரத்தினில்...அரசளித்து - அந்த நகரத்திலே இருக்குவேளிர் குலத்தில் தோன்றி அரசு செய்து; மன்னிய.....அணிந்த -நிலைபெற்ற பொன்னம்பலத்தின் அழகிய முகட்டிலே ஒளியுடைய கொங்குநாட்டின் புகழுடைய எடையேறப் பெற்ற பசும்பொன்னினாலே விளங்கும் ஒளியுருவின் மேல் வேய்ந்து அணிந்த; பொன்.......குடிமுதலோர் - பொன்னணிகள் பூண்ட தோளையுடைய ஆதித்தச் சோழனது புகழ்தங்கிய மரபில் குடிமுதல்வராய், |
3 |
4112. (இ-ள்) இடங்கழியார்....நாமத்தார் - இடங்கழியார் என்று உலகத்தில் புகழ்பெற்ற பெரிய பெயரினையுடையவர்; அடங்கலர் .....முன்னாதார் - பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவபெருமானது திருவடித் தொண்டின் நெறியினையேயன்றி ஏனை முடக்கம் பொருந்திய புறநெறிகளைக் கனாவிலும் நினைக்காதவர்; எந்நாளும்.......செய்வார் - எக்காலத்திலும் தொடர்ந்த பெரிய காதலினாலே தொண்டர்கள் வேண்டிய பணிகள் எல்லாவற்றையும் செய்வாராகி, |
4 |
4113. (இ-ள்) சைவநெறி.....தழைப்ப - சைவநெறியானது வைதிக தரும நெறியுடனே தழைக்க; மைவளரும்....விளங்க - விடத்தினைக் கொண்ட திருமிடற்றினையுடைய இறைவர் நிலைபெற வீற்றிருக்கும் திருக்கோயில்களிலெங்கும் உண்மை வழிபாடாக அர்ச்சனைகள் சிவாகம விதிவழியே மேன்மேல் விளங்க; மொய்...புகழ் பெருக - கூடிவளர்கின்ற வளப்பமுடைய புகழ் பெருக; முறைபுரியும் அந்நாளில் - அரசு செலுத்தும் நாளிலே. |
5 |
4114. (இ-ள்) சங்கரன்.......அங்கொருவர் - அங்குச் சங்கரரது அடிய வர்க்கு அமுது அளிக்கும் தவத்தினையுடையார் ஒருவர்; அடியவருக்கு.....முட்ட - ஒருநாள் அடியவருக்குத் திருவமுதாக்குதற்குரிய பண்டங்கள் பெற எங்கும் ஒரு செயல் காணாமையால் தாம் செய்துவந்த பொருந்திய அத்தொழில் முட்டுப்பட; பொங்கி....தெரியாது - மேன்மேலும் பொங்கி எழுகின்ற பெரிய விருப்பத்தினாலே தாம் செய்யும் செயல் தெரியாது. 6 |
4115. (இ-ள்) அரசரவர் பண்டாரத்தில் - இடங்கழியாராகிய அரசரது பொக்கிசத்திலே; அந்நாட்டின்.......எடுப்பவரை - அந்நாட்டின் நெற்கூடுகளின் வரிசை நிறைந்த மதிற் காவல் பலவுள்ள நிலைக்கொட்டகாரத்தில் எங்கும் மிகுந்து இருள் நிறைந்த பாதி இரவிலே புகுந்து நெல்லினை முகந்து எடுக்க அவரை; முர |