புரியும் வினை தெரியாது - தாம் செய்ய எண்ணிய தொழில் திருட்டாகும் என்ற இழிபினை யறியாமல். இன்னது செய்வது என்ற வழியறியாமல் என்றலுமாம். ஒருவருக்கு ஒருபொருள்மேல் பெருவிருப்பு மூண்டிடின் அதுபற்றிச் செய்யும் வினையின் ஏற்றத்தாழ்வு நாடாது செய்வர் என்பது உலகியல் உண்மை; பெருவிருப்பும் பெருஞ்சினமும் அறிவினை அழிக்கும் தன்மையனவாம்; ஆதலின் “காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார்க் கண்ணதே” என்றனர் பிற்காலத்து நீதிநூலார். 6 |
4115. (வி-ரை) பண்டாரம் - பொக்கிசம் - நிதிகள் சேமிக்குமிடம்; செல்லும் பெருஞ்செல்வத்துள் சேர்த்தெண்ணப்படும். 4117 - பார்க்க. |
அந்நாட்டின் நெற்கூட்டின் - அந்நாட்டின் இறைப்பொருளாய் வந்த நெற்கூட்டின்; அரசரின் கீழ்ப் பல நாடுகளிருத்தலின் அவ்வந்நாட்டு இறைப்பொருள் நெற்கூடுகள் அங்கங்கும் அமைக்கப்படுவன என்பது. நிலை - வரிசை. |
புரிபலவாம் நிலைக்கொட்டகாரம் - மதில் வகையால் பற்பலபுரிகளாக அரண் அமைக்கப்பட்ட கொட்டகாரம்; புரி - போர்கள்; கொட்டகாரம் - பண்டங்கள் சேமிக்கும்படி அமைந்த பெரு வீடு. |
புரை செறி நள் இருள் - மிக்க நள்ளிருள் இடை. |
முரசெறி காவலர் - யாமத்தின் அளவுஇரவு கடிகை தெரிப்ப இரவு முழுதும் முறைப்படுத்தி முரசெறிந்து காவல்புரியும் காவலாளர் - (Night guards) ; முரசு - நாழிகைப்பறை; |
4116. | மெய்த்தவரைக் கண்டிருக்கும் வேன்மன்னர் வினவுதலும் “அத்தனடி யாரையா னமுதுசெய்விப் பதுமுட்ட இத்தகைமை செய்தே” னென் றியம்புதலு மிகவிரங்கிப் பத்தரைவிட் “டிவரன்றோ பண்டார மெனக் ”கென்பார், 8 |
4117. | நிறையழிந்த வுள்ளத்தால் “நெற்பண்டா ரமுமன்றிக் குறைவினிதிப் பண்டார மானவெலாங் கொள்ளைமுகந் திறைவனடி யார்கவர்ந்து கொள்க” வென வெம்மருங்கும் பறையறையப் பண்ணுவித்தார் படைத்தநிதிப் பயன்கொள்வார். 9 |
4116. (இ-ள்) மெய்த்தவரை.....வினவுதலும் - காவலாளர் பிடித்துவந்த அந்த மெய்யடியவரை அரச கொலுவீற் றிருக்கும் வேலேந்திய அரசர் கண்டு வினவுதலும்; அத்தன்.....இயம்புதலும் - இறைவனது அடியவர்களை யான் அமுது செய்விக்கும் தொழில் முட்டுப்பட்டமையாலே இவ்வாறு செய்தேன் என்று அவர் சொல்லுதலும்; மிக இரங்கி.....என்பார் - அதற்கு மிகவும் இரங்கி, அடியவரைக் காவலினின்று விடுவித்து, இவரன்றோ எனக்குப் பொக்கிசமாவார் என்று சொல்வாராகி, 8 |
4117. (இ-ள்) நிறையழிந்த உள்ளத்தால் - நிலையழிந்த உள்ளத்தினாலே; நெற்பண்டாரமுமன்றி.......கொள்க என - நெற்பண்டாரம் மட்டுமே யன்றிக் குறைவில்லாத நிதிகளின் பொக்கிசங்களாகிய எல்லாவற்றையும் கொள்ளையாக முகந்து இறைவனடியார்கள் கவர்ந்து கொள்க என்று; எம்மருங்கும்.....பயன் கொள்வார் - எல்லாப் |