பக்கம் எண் :

பெரியபுராணம்421

அரசாட்சியின் குறிக்கோள் என்பது கருத்து. முன் (4113) உரைத்தவை பார்க்க. நிறை -
உறுதி; பொருட்பற்று நீங்கிய எண்க.
 
     நெற்பண்டாரமுமன்றிக் குறைவினிதிப் பண்டாரமும் - பண்டாரம் -
(பொக்கிசம்) நெல்லும், பொன் - மணி முதலாயினவும், என இருவகையினது;
இவ்விருவகையினையும்; எலாம் - எல்லாவகையும்; முற்றும்மை தொக்கது.
 
     கொள்ளை முகந்து - கொள்ளை - எண்ணில்லாமற் கொள்ளப்படுவது ; அளவு
படாதபடி; முகந்து என்பதும் இக்குறிப்புத்தருவது; வாரிக்கொண்டு. கொள் - பகுதி.
 
     பறையறையப் பண்ணுவித்தார் - பறைசாற்றுவித்தனர்; பறைசாற்றுதலினாலும்
வாக்கினால் செரல்லுதலினாலும் இச் செய்தியினை அடியார் தெரியும்படி;
 
     நெற்...பண்ணுவித்தார் - “திங்கட் சடையான் றமரதென் செல்வ மெனப் பறை
போக்கும்” என்பது வகைநூல் ( திருவந் - 65).
 
     படைத்த - பெற்ற - ஈட்டிய; சேமித்த.
 

     நிதிப்பயன் - நிதிபடைத்த பயனாவது சிவனுக்கும் அடியாருக்கும் ஆக்குதலாம்
என்பது வேத சிவாகமங்களின் துணிபு; முன் பல இடத்தும் உரைத்தவை யெல்லாம்
காண்க. குறைவில்நிதி - படைந்தநிதி - முன்னோர் காலமுதல் ஈட்டிவைத்த
பெரும்பொருள் என்பது குறிப்பு.
 

     கொள்வார் - கொள்வாராய்; கொள்வார் - பண்ணுவித்தார் என்று கூட்டுக.
வினையாலணையும் பெயராகக் கொண்டு கொள்வாராகிய நாயனார் பண்ணுவித்தார்
என்றலுமாம்.                                                     9
 
4118.   எண்ணில்பெரும் பண்டார மீசனடி யார்கொள்ள
உண்ணிறைந்த வன்பினா லுறுகொள்ளை மிகவூட்டித்
தண்ணளியா னெடுங்காலந் திருநீற்றி னெறிதழைப்ப
மண்ணிலருள் புரிந்திறைவர் மலரடியி னிழல்சேர்ந்தார்.              10
 
     (இ-ள்) எண்ணில்...மிகவூட்டி - அளவில்லாத பெரிய சேமநிதிகளை யெல்லாம்
இறைவனடியார்கள் கவர்ந்து கொள்ளும்படி மனத்தின் உள்ளே நிறைந்த அன்பினாலே
உற்ற கொள்கை நிகழ மிகவும் செய்வித்து; தண் அளியால்....அருள் புரிந்து - குளிர்ந்த
அளியினால் நீண்டகாலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி உலகில் அருள்புரிந்து;
இறைவர்.....சேர்ந்தார் - சிவபெருமானது திருவடி நீழலினை அடைந்தனர்.
 
     (வி-ரை) எண்ணில்......ஊட்டி - பறைசாற்றுவித்த செயலினை முன் கூறினார்;
அவ்வாறு பறைசாற்றக் கேட்டுச் சிவனடியார்கள் அனேகராய் வந்தனர்; பறை
சாற்றியவாறே தமது பண்டாரங்களை யெல்லாம் திறந்துவிட்டு எல்லா நிதிகளையும்
அவர்கள் கொள்ளைபெற முகந்து கொள்ளச் செய்தனர்; இவ்வாறு நிகழ்ந்தது
உண்ணிறைந்த அன்பினாலாகியது என்பதாம்.
 
     தண் அளியால்.......அருள் புரிந்து - அளி - கருணை; அருள் புரிந்து -
உலகினர் மேல்வைத்த கருணையினாலே திருநீற்றின் நெறிதழைக்கும்படி அரசுசெய்து;
திருநீற்றின் நெறி - சைவநெறி; இன் - இனிய; அரசாட்சியினை அருள் புரிந்து
என்றது இறைவர் காத்தல்போல இவர் அரச நீதியினை உயிர்கள் உய்திபெறும்
நோக்கத்துடன் இயற்றினர் என்பதாம்.                                 10