(2) மரபிற் பின் வந்தவரது சிறப்பினாலே வழிவழி முன்னோரது சிறப்பும் அறியப்படும். |
(3) அரசாட்சியின் குறிக்கோளாவது சைவநெறியும் வைதிகநெறியும் தழைத்து உலகம் ஒழுகச் செய்தலும், சிவன் கோயில்களில் வழிபாட்டர்ச்சனைகள் மேன்மேல் விளங்கச் செய்தலுமே யாம். |
(4) களவு முதலாகிய விலக்கிய தொழில்கள் செய்தேயும் அடியார்க்கமுதூட்டுதலும், திருத்தொண்டாற்றலும் பிழையாது ஒழுகுதல் அழுந்திய அன்பின் உறைப்பாலாவது; மூர்க்க நாயனார் வரலாறு பார்க்க. |
(5) தமது பொருளை வவ்வியேனும் திருத்தொண்டு செய்து அதன் பயனைத் தமக்குக் கொடுக்கும் பெரியோரே உண்மையான சேமநிதியாவர்; அப்பொருள் சேமமாயிருந்து பயனையும் உதவுதலாற் பண்டாரத்தினும் பெரியார் அவர் என்று பெரியோர் கொள்வர். |
(6) செல்வ முழுமையும் அடியார்கள் கொள்க என்று பறைசாற்றியும் கொள்ளை முகந்து கொள்க என்று பறைசாற்றியும் கொள்ளை ஊட்டுதல் படைத்த நிதிப் பயன் கொள்வார் செய்யும் செயலாம். |
தலவிசேடம் - கொடும்பாளூர் :- புதுக்கோட்டைச் சமஸ்தானத்தில் மணற்பாறை என்ற நிலயத்தினின்றும் தென்கிழக்கு புதுக்கோட்டை போகும் கற்சாலையில் 10- நாழிகை யளவில் அடையத்தக்கது; விராலிமலையினின்று தென் மேற்கு மட்சாலை வழி 10 - நாழிகை யளவிலும் அடையலாம்; இங்கு உள்ள கோயில் மிகப் பழமையாய்க் கிலமாயுள்ளது; நாயனாரது திருவுருவம் காணப்படவில்லை. இக் கோயிலைப் புதுக்கி, நாயனார் திருவுருவம் தாபித்து வழிபடச் செய்வது உத்தமமாகிய சிவ புண்ணியமாகும். |
54. இடங்கழி நாயனாார் புராணம் முற்றும். |