உ சிவமயம் |
55. செருத்துணை நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் “தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் னடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (9) |
வகை |
| கழிநீள் கடனஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்றன் றேவிமுன் மோத்தலுமே யெழினீள் குமிழ்மலர் மூக்கரித் தானென் றியம்புவராற் செழுநீர் மருகனன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. | |
விரி |
4120. | உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி கொள்ளு மியல்பிற் குடிமுதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாந் தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ் சேலுங் கயலுஞ் செழுமணியுந் தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர். 1 |
புராணம் :- முன் உரைத்தாங்கு உரைக்க. |
தொகை :- தஞ்சாவூரின் தலைவராகிய செருத்துணையாரது அடியார்க்கும் நான் அடியேன். |
தஞ்சை - இது மருகனாட்டுத் தஞ்சாவூர்; வகை நூலும் விரிநூலும் பார்க்க. தஞ்சை நாட்டுத் தஞ்சாவூர் வேறு; அதுதான் இப்போது அப்பெயரால் விளக்கமா யறிப்படுவது. மன்னவன் - தலைவர் என்ற சிறப்புப் பொருள் அளவில் தந்து நின்றது. |
வகை :- கழிநீள்.....மலரை - கழிகள் உள்ளே நீண்டு செல்லும் கடலில் எழுந்தவிடத்தினை உண்டருளிய இறைவருக்காக இருந்த மணமுடைய மலரினை; மொழி.....மோத்தலுமே - எடுத்து மொழியப்படுகின்ற புகழினையுடைய கழற்சிங்கருடைய பட்டத்தரசி எடுத்து மோந்தவுடனே; எழில்....இயம்புவரால் - அழகிய நீண்ட குமிழம்பூப் போன்ற மூக்கினை அரிந்தவர் என்று சொல்லுவர்; செழுநீர்......செருத்துணையே - செழுநீர் வளமுடைய நல்ல மருகல் நாட்டுத் தஞ்சாவூரில் உள்ள செருத்துணையாரையே. |
செருத்துணையே - என்று இயம்புவர் என்க. |