பக்கம் எண் :

பெரியபுராணம்427

துள்ளது” (137); ஞானமுனிவர்கள் தவஞ்செய்து வழிபடுகின்றார்கள். நெருங்குதல் -
பலர் கூடியிருத்தல்.
 
     மானம் - பெருமை; மாட்சிமை; திருத்தொண்டு - திருமுற்றத்தினுள் செய்யும்
சரியைத் திருப்பணிகள். முற்றம் விளங்குதல், திருவலகிடுதல், கல் - புல் - முள்
முதலியவற்றை அகற்றும் உழவாரப்பணி செய்தல், செடிகளுக்கு நீர் வார்த்தல்,
களைகட்டுதல் முதலாயின, மானநிலவு - பெருமையோடு விளங்குகின்ற.
 
     காலங்கள் - வழிபாட்டுக்குரிய பூசைநேரங்கள்.
 
     தொண்டு பொலிய - திருத்தொண்டின் நெறி சிறந்து விளங்க.              3
 
     4123. (வி-ரை) உலகு நிகழ்ந்த....மோந்ததற்கு - இதன் விரிவு முன் (4099 -
4100) கழற்சிங்க நாயனார் புராணத்துள் உரைக்கப்பட்டது. வந்து - எய்தி என்று
கூட்டுக; வந்த என்பது பாடமாயின், வத்த பொறாமை - மனத்துள் வந்த
பொறுக்கலாற்றாமை என்க.
 
     வழித்தொண்டர் - வழி - சிவநெறி வழியே ஒழுகிய; “பரவுந் தொண்டின் நெறி
நின்றார்” - (4121); வழித்தொண்டராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது;
வழித்தொண்டராதலின் தனித்தொண்டர் அரிந்தார் என்று கூட்டுக; ஏனையோர்கள்
இவ்வாறுவரும் அபராதங்களைக் கண்டு சிறிதும் கருதாது செல்கின்றாரெனில் அவர்கள்
திருத்தொண்டின் வழிநிற்பாரல்லர் என்பதாம்.
 
     எழுந்த - மனத்துள் எழுந்து உடலினைச் செலுத்திய; வேகம் - உடலின் செலவு
வேகம்; கோபம் என்றலுமாம்; கோபமாவது சிவாபராதம் கண்டு பொறாத தன்மையால்
வருவது. “வேகியானாற் போல்” (சித்தி - 1 - 50); மனக்குற்ற மாகிய குணமன்று.
வேகத்தால் - வேகத்தோடு.
 
     எடுத்தெழுந்து - என்பதும் பாடம்.                                    4
 
     4124. (வி-ரை) முற்றி - சேர்ந்து; மற்றவள் - தகாத செய்கை செய்தவள் என்ற
குறிப்புப்பட மற்று என்றார்.
 
     கருமென்...பற்றி - இவை மூக்கரியும் தண்டம் செய்தற்குற்ற செயல்கள்; வன்மை
பற்றயனவல்ல.
 
     பரமர்....தடிவன் - இஃது இவர் மனத்துட்கொண்ட துணிவு.
 
     தலைமைத் தனித்தொண்டர் - இச்செயல்வேறு எவராலும் செய்யலாகாதது
என்பது; மேல்வரும் பாட்டுப் பார்க்க.
 
     முட்டி - என்பதும் பாடம்.                                           5
 
4125. அடுத்த திருத்தொண் டுலகறியச் செய்த வடலே றனையவர்தாந்
தொடுத்த தாம மலரிதழி முடியா ரடிமைத் தொண்டுகட
லுடுத்த வுலகி னிகழச் செய் துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே யிறவா வின்ப மெய்தினார்.                    6
     (இ-ள்) அடுத்த......அனையவர்தாம் - அடுத்ததாகிய திருத்தொண்டினை உலக
மறியும்படி செய்த வலிமை பொருந்திய ஆண்சிங்கம் போன்ற செருத்துணையன்பர்;
தொடுத்த......செய்து - தொடுக்கப்பட்ட மாலை போன்ற கொன்றைப் பூவினைச் சூடிய
திருமுடியினையுடைய சிவபெருமானது அடிமைத் திருத்தொண்டினைக் கடல் சூழ்ந்த