உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
56. புகழ்த்துணை நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை (9) |
வகை |
| “செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையஞ் சிறுவிலைத்தாய் உருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா தருவரை வில்லி யருளி னிதியது பெற்றனனே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (67) |
விரி |
4127. | செருவிலிபுத் தூர்மன்னுஞ் சிவமறையோர் திருக்குலத்தார் அருவரைவில் லாளிதனக் ககத்தடிமை யாமதனுக் கொருவர்தமை நிகரில்லா ருலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்த்துணையா ரெனும்பெயரார். 1 |
புராணம் : முன் உரைத்தாங்குரைக்க. |
தொகை : பக்கத்திற் சூழ்ந்த புலித்தோலாடையின் மேல் பாம்பு ஆட ஆடுகின்ற இறைவரது பொன்னடிகளுக்கே மனம்வைத்த புகழ்த்துணை நாயனாருக்கு அடியேன். |
ஆடி - ஆடுகின்றவர், பெயர்: பிறைசூடி - மதிசூடி என்பனபோல; பொன் அடிக்கே - பொன் - அருமைப்பாடு குறித்தது; பொன் பூண்ட - பொன்னார்ந்த என்றலுமாம். “பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்” (தேவா); அடிக்கே ஏகாரம் பிரிநிலை; மனம் வைத்த - அதனையே தஞ்சமென்று கொண்டும் பிறி தொன்றினையும் நினையாமலும் தொண்டு செய்த. அதள் - தோல்; அதள் மேல் அரவு - கச்சாக வீக்கிய அரவு. |
வகை : செருவிலிபுத்தூர்....உணவின்றி - செருவிலிபுத்தூரில் வந்த புகழ்த் துணையார், உலகில் வற்கடம் வந்தமையால் உடல் வலிமைகெட்டு உணவின்றி வருந்தி; உமைகோனை.....விழத்தரியாது - சிவபெருமானைச் திருமஞ்சனம் செய்யும் போது கை சோர்ந்து தண்ணீர்க்கலசம் இறைவரது திருமுடியில் விழத்தரியாது |