பக்கம் எண் :

பெரியபுராணம்431

வருந்தி; அருவரை...பெற்றனனே - அரிய மலைவில்லினையுடைய இறைவரது
திருவருளினாலே நித்தல் படிக்காசு பெற்றனர்.
 

     சிறுவிலைத்தாய் - வற்கடமாகி உணவுப் பொருள்கள் சிறுவிலைக்குப் பெற
இயலாதபடி குறைதல்; பஞ்சம் வந்து; உணவின்றி - உருவலிகெட்டு என்க; உரு -
உடல்; செய் - செயல்; கலசம் - மஞ்சன நீர்க்குடம்; விழ - இறைவர் திருமுடிமேல்
விழ; தரியாது - தரியாது அஞ்சி வீழ்ந்து நடுங்க; நிதியம் படிக்காசு; விரிவுகள்
புராணத்துக் காண்க. சிறுவிலை - விலையின் அளவுக்குப் பெறும் பண்டம் சிறிதாதல்;
பொருளியல் நூன் மரபு வழக்குச் சொல். High Prices என்பர் நவீனர். பண்டம் பெற
இயலாதபடி, நாணயத்தின் சத்தி குறைதல். தமிழ் வழக்கு இதனை நன்கறிவித்தல்
காண்க.
 
     தொண்டின் பண்பும் பெயரும் தொகை நூல் கூறிற்று; அவற்றுடன் ஊரும்
தொண்டின் வரலாறும் வகை நூல் வகுத்தது.
 
     விரி: 4127. (இ-ள்) செருவிலிபுத்தூர்....குலத்தார் - செருவிலிபுத்தூரில் நிலை
பெற்று வாழும் சிவவேதியர் திருக்குலத்தில் அவதரித்தவர்; அருவரை.......நிகரில்லார் -
அரிய மலைவில்லாளியாராகிய சிவபெருமானது அகம்படிமைத் தொண்டு
பூண்டொழுகும் அத்தன்மையில் தமக்கு நிகராக ஒருவரையு மில்லாதவர்; உலகத்து
..பெயரார் - உலகத்தில் பரந்து ஓங்கும் ஒப்பற்ற புகழ்நீடிய புகழ்த்துணையார் என்னும்
பெயரையுடையவர்.
 
     (வி-ரை) அருவரை வில்லாளி - வரை - பொன்மலை; “அருவரை வில்லி”
வகை நூல்.
 
     அகத்தடிமை.......நிகரில்லார் - அகத்தடிமைப் பண்பில் ஒப்பில்லாதவர்;
அகத்தொண்டாவன; திருமேனி தீண்டித் திருமஞ்சனம் செய்தல், அலங்கரித்தல்,
நிவேதித்தல், பூசித்தல், கருவறை விளக்குதல் முதலாயின.
 
     உலகத்து.....புகழ்நீடு - “எங்கு நிகழ்ந்த புகழ்த்துணையார்” (4126.) புகழ்த்
துணையார் - என்றது காரணக்குறி என்றபடி.
 
     அருவிவரை வில்லாளிக்கு - என்பதும் பாடம்.                        1
 
4128. தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாட்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும்
“எங்கோமான் றனைவிடுவே னல்லே” றிராப்பகலுந்
கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண் டர்ச்சிப்பார்,              2
 
4129. மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனறாங்கு குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்,                        3
 
4130. சங்கரன்ற னருளாலோர் துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்க னருள்புரிவா “னருந்துணவு
மங்கியநாள் கழிவளவும் வைப்பதுநித் தமுமொருகா
சிங்குனக்கு நா” மென்ன விடர்நீங்கி எழுந்திருந்தார்.                   4