பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்432

     4128. (இ-ள்) தங்கோனை ...வழிபடுநாள் - தமது பெருமானைத் தவத்தினாலே
தத்துவத்தின் நெறியாலே வழிபட்டுவருகின்ற நாளிலே; பொங்கோதம்.....பசிபுரிந்தும் -
பொங்கும் கடல் சூழ்ந்த உலகத்திலே வற்கடம் வந்து உணவின்றிப் பசிமிகுந்திருந்தும்;
எங்கோமான்.....இராப்பகலும் - எமது பெருமானை நான் விடுவேனல்லேன் என்று
இரவும் பகலுமாக; கொங்கார் .....அருச்சிப்பார் - மணமுடைய பல
மலர்களைக்கொண்டும்; குளிர்ந்த நீரினைக் கொண்டும் அருச்சிப்பாராகி,            2
 

     4129. (இ-ள்) மாலயனுக்கு.......பொழுது - மாலுக்கும் அயனுக்கும் தேடற்கரிய
பெருமானைத் திருமஞ்சனமாட்டும் பொழுது; சாலவுறு.....தளர் வெய்தி - மிகவும்
பொருந்திய பசி நோயினாலே வருத்தமுற்று நிலைதளர்ந்து; கோல....மாட்டாமை -
அழகிய நிறைந்த நீரினை உடைய குடத்தினை தாங்க மாட்டாது; ஆலமணி....அயர்வார்
- விடமணிந்த கண்டத்தினை யுடைய பெருமானது திருமுடிமீது வீழ்த்துச் சோர்வாராகி,                                                           3
     4130. (இ-ள்) சங்கரன்றன்....அடைய - சங்கரருடைய திருவருளாலே உறக்கம் வந்து தம்மையடைய; அங்கணனும்......புரிவார் - இறைவரும் கனவு நிலையில் அவருக்கு அருள் செய்வாராய்; அருந்துணவு......என்ன - உண்ணும் உணவு குறைந்த காலம் தீருமளவும் இங்கு உனக்கு நாம் நித்தமும் ஒரு காசு வைப்போம் என்று அருளிச் செய்ய; இடர் நீங்கி எழுந்திருந்தார் - துன்பம் நீங்கித் துயிலுணர்ந்து எழுந்தனர்.    4
 
     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
 
     4128. (வி-ரை) தவம் - சிவபூசை; தத்துவத்தின் வழிபடுதலாவது ,எல்லாப்
பொருள்களையும் தத்துவங்களின் வைத்து உண்மை யுணர்த்தி வழிபட்டுய்யும்
நெறியினை வகுக்கும் சிவாகம விதியாலே.
 
     வற்கடம் - பஞ்சம் - வறுமைக்காலம்.
 
     பசிபுரிந்தும் - பசியினால் வருந்திய போதிலும்; புரிதல் ஈண்டு மிக உண்டாதல்
என்னும் பொருட்டு.
 
     எங்கோமான்றனை விடுவேனல்லேன் - “கற்பகமே யானுன்னை விடுவே
னல்லேன்” (தேவா - அரசு); கோமான்றனை - கோமானது பூசையினை.
 
     மலர்கொண்டு புனல்கொண்டு அர்ச்சிப்பார் - பூவுநீருங் கொண்டு பூசிப்பார்;
“புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு ” (திருமந்). “பூவொடு நீர் சுமந்தேத்தி”
(தேவா - அரசு). இராப்பகல் - இரவும் பகலும்; உம்மைத்தொகை.
 
     அருச்சிப்பாராகி - வீழ்ந்து அயர்வாராகி (4129) அடைய - நீங்கி -
எழுந்திருந்தார் (4130) என்று கூட்டுக. அருச்சனை - பூசை என்னும் பொருளில்
வந்தது.                                                               2
 
     4129. (வி-ரை) நிலைதளர்கல் - உடல் தடுமாறுதல்; கோலம் - அழகு; மலர்
அறுகு - முதலியவை பெய்து மந்திரித்த தூய்மை நிலையே கோலம் எனப்பட்டது.
 
     புனல் தாங்கு குடம் - நீர் நிறைந்த குடம்.
 
     தாங்கு குடம் தாங்கமாட்டாமை - சொல்லணி; வீழ்ந்து அயர்வார் -
வழுத்திச் சோர்ந்து வீழ்ந்தனர். மாட்டாமை - மாட்டாமையால்.
 
     பசிப்பிணியால் - “உணவின்றி” வகை நூல். சாலவுறு - மிகப் பொருந்திய;
ஒருபொருட் பன்மொழி; “சாலவுறு தவநனி கூர்மிகல்”
 
     அரியானை மஞ்சனமாட்டும் பொழுது - “உமைகோனை மஞ்சனஞ்செய்
தருவதோர் போது” வகைநூல்.