உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
57. கோட்புலி நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை (9) |
வகை |
| “பெற்ற முயர்த்தோன் ” விரையாக் கலி” பிழைத் தோர்தமது சுற்ற மறுக்குந் தொழிற்றிரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்ற மறுக்குநங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற வருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே.” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி (68) |
விரி |
4134. | நலம்பெருகுஞ் சோணாட்டு நாட்டியத்தான் குடிவேளாண் குலம்பெருக வந்துதித்தார் கோட்புலியா ரெனும்பெயரார் தலம்பெருகும் புகழ்வளவர் தந்திரியா ராய்வேற்றுப் புலம்பெருகத் துயர்விளைப்பப் போர்விளைத்துப் புகழ்விளைப்பார், 1 |
4135. | மன்னவன்பாற் பெறுஞ்சிறப்பின் வளமெல்லா மதியணியும் பிஞ்ஞகர்தங் கோயிறொறுந் திருவமுதின் படிபெருகச் செந்நென்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே பன்னெடுநாட் செய்தொழுகும் பாங்குபுரிந் தோங்குநாள், 2 |
4136. | வேந்தனே வலிற்பகைஞர் வெம்முனைமேற் செல்கின்றார், பாந்தள்பூ ணெனவணிந்தார் தமக்கமுது படியாக ஏந்தலார் தாமெய்து மளவும்வேண் டுஞ்செந்நெல் வாய்ந்தகூ டவைகட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார். 3 |
4137. | தந்தமர்க ளாயினார் தமக்கெல்லாந் தனித்தனியே “எந்தையார்க் கமுதுபடிக் கேற்றியநெல் லிவையழிக்கச் சிந்தையாற் றானினைவார் திருவிரையாக் கலி” யென்று வந்தனையா லுரைத்தகன்றார் மன்னவன்மாற் றார்முனைமேல். 4 |
புராணம் :- முன்னுரைத் தாங்குரைத்துக்கொள்க. |