பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்438

கூடுகளைக்கட்டி; வழிக்கொள்வார் மொழிகின்றார் - பயணம் செல்பவர் சொல்கின்றாராகி,                                                 3
 
     4137. (இ-ள்) தம்.....தனித்தனியே - தமது சுற்றத்தார்க ளாயினார்களவர்கள்
எல்லாருக்கும் தனித்தனியே; எந்தையார்க்கு .....என்று - எமது இறைவருக்கு அமுது
படிக்காகச் சேர்த்துள்ள இந்நெற்கூடுகளைத் தாம் அழிக்கும்படி மனத்தினாற்றானும்
நினைப்பார்களாயின் திருவிரையாக்கலியின் மேல் ஆணை நிகழ்வதாக என்று கூறி;
வந்தனையால்...முனைமேல் - வந்தனை செய்த கூறிவிட்டு அரசரது பகைவர்களது
போரின் மேல் சென்றனர்.                                          4
 
     இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4134. (வி-ரை) குலம் பெருகுதல் - குலம்புகழாற் பெருக நிகழ்தல்;
உயர்வடைதல்; தந்திரியார் - சேனாபதியார்; தந்திரம் - சேனை; வேற்றுப்புலம் -
பகைவரது நாடு; புலம் - இடம்; இடவாகு பெயராய் மக்களைக் குறித்தது; வேறு -
பண்பாகு பெயராய்ப் பகைவேந்தரைக் குறித்தது.
 
     வேற்றுப்புலம்........போர் விளைப்பார் - இவர் போர் முனையிற் சென்று
போர்புரிந்தாற் பகைவரது நாடுகளில் பெருகிய துன்பம் வருவதன்றி வேறில்லை;
இவரது வெற்றியினால், என்பது, நலம் பெருகும் - நன்மைமிக்க; துயர்பெருக
விணைப்ப
என்க.
 
     புகழ்விளைப்பார் - வெற்றியினால் தமது அரசருக்கும் தமக்கும் புகழ் பெருகச்
செய்வார். தலம் பெருகும் - உலகிற்சிறந்த;
 
     சோணாட்டு - சோழநாட்டிலே. சோழன்நாடு - சோணாடு என வந்தது - மருஉ
மொழி.
 
     துயர்விளைய - என்பதும் பாடம்.                               1
 
     4135. (வி-ரை) பெறும் சிறப்பின் வளம் - சேனாபதித் தன்மைக்காகவும்,
அதனில் விளைக்கும் வெற்றியின் புகழுக்காகவும் ஊதியமாகவும் சிறப்பாகவும் பெறும்
பொருள்கள்; வளம் .ஊதியம். சிறப்பு - அவ்வப்போது செய்வது.
 
     திருவமுதின்....குவடாக - இறைவரது பூசையினில் வேண்டும் திருவமுதுக்
கட்டளை மேன்மேற் பெருகும்படிக்குரிய செந்நெல்லினை மலையின் உச்சி போலாக;
மலைக்குவடு ஆக - குவடு - சிகரம்; நெற்குவைகள் சிகரத்தையுடைய மலைகளைப்
போன்றன என்பது; ஆக - ஆக்கச் சொல் உவமை குறித்தது.
 
     செய்துவரும் திருப்பணியே - சிவனுக்கமுதுபடி பெருகச் செய்தல் திருப்பணியா
மென்பது; சிவனுக்காகும் படியினைக் குறைத்தல் மாபாவ மென்பதும், அது ஆயுளைக்
குறைக்கு மென்பதும் மந்தாதர என்னும் அரசரது வரலாற்றினின்றும் அறியப்படும்.
(1116) இவையெல்லாம் எண்ணாது சிவன் கோயிற் படித்தரத்தினைக் குறைத்தலும்,
சிவதிரவியங்கொண்டு ஆடம்பரங்கள் செய்தலும், பசுதருமங்களே மேலானவை
(மருத்துவச்சாலை - தண்ணீர் வசதி - சாலை முதலியன) என்று கொண்டு
மனம்போனபடி சிவனுக்குரிய பதிப்பொருள்களை தத்தம் அற்ப அதிகாரச்
செருக்குக்கொண்டு பசுதருமங்களிற் செலவு செய்தலும் இந்நாளிற் கோயில்
அதிகாரிகளின் கொடுந் தொழிலாயிருக்கக் காண்கின்றோம். கொடிது! கொடிது!!
 
     பாங்கு - அதற்கு வேண்டும் ஒழுங்குகள்; ஓங்குதல் - சிறப்புறுதல்.
 
     ஒழுகுநாள் - என்பதும் பாடம்.                                  2
 
     4136. (வி-ரை) செல்கின்றார் - செல்கின்ற நாயனார் அவ்வாறு செல்லும்
போது.