பக்கம் எண் :

கடல் சூழ்ந்த சருக்கம்444

னிப்பதென்பது இந்நாள் உலகியற் சட்டங்களிற் காண்பது. அஃது உயிரினியல் பற்றிய
கன்மப் பொறுப்புக் கேலாததாம்.
 
     எடுத்தெறிந்து......ஏற்றார் - அக்குழவியை நாயனார் துண்டிக்க நிலை; குழவி
கீழே கிடப்பதொரு சிறுபண்டமாதலின் கிடந்தவாறே துண்டித்தல் இயலாமையின்
எடுத்தெறிந்து துண்டமாக்க வேண்டியதாயிற்று என்க.
 
     மின் நல்ல வடிவாள் - மின்னுதல் - வாளின் ஒளி; வடித்தல் - கூர்மை
குறித்தது. நல்ல - நன்மை பயத்தற் குறிப்பு; எறிபத்த நாயனார் புராணத்துள் எறிபத்தர்
கையிற்கொண்டது மங்கலம் பொருந்திய மழுவென்ற வரலாறும், மேல் “உன்னுடைய
கைவாளால்'' என்பதும் காண்க சேய்ஞலூர்ப பிள்ளையார்தந் திருக்கையிற் கோல
மழுவால்” (1263) என்ற கருத்தும் கருதுக.
 
     இவ்விரண்டு பாட்டினாலும் நாயனார் உலகியல்பு எல்லாம் கடந்து முற்றும்
சிவமே பற்றாக நின்றநிலை கூறப்பட்டன. “உலகினி லியற்கையை ஒழிந்திட்
டற்றவர்க்கற்ற சிவன்” (தேவா) என்றபடி அந்நிலையே சிவன் வெளிப்பட்டருளும் நிலை
என்பதற்கெழுந்தது மேல்வரும் திருப்பாட்டு.                           10
 
4144.    அந்நிலையே சிவபெருமா னன்பரெதிர் வெளியேநின்
“றுன்னுடைய கைவாளா லுறுபாச மறுத்தகிளை
பொன்னுலகின் மேலுகம் புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடனணை” கென் றேவியெழுந் தருளினார்.      11
 
     (இ-ள்) அந்நிலையே.......நின்று - அந்நிலையிலே அப்போதே சிவபெருமான்
அன்பரெதிரில் வெளிப்பட்டு எழுந்தருளி நின்று; உன்னுடைய...என்று ஏவி -
உன்னுடைய கையில் ஏந்தியவாளினால் துண்டமாக்கித் தண்டிக்கப்பட்டதனாலே இங்குத்
தம்மைப்பற்றிய பாசத்தை அறுத்துப் புனிதராகிய உன் சுற்றத்தார்கள் தேவருலகத்தினும்
மேலாகிய உலகங்களிலும் புகுந்து பின் வந்து முறையில் நமது உலகத்தினிற் சார, நீ
இந்நிலையில் இப்போதே நம்முடனே அணைவாயாக என்று கட்டளையிட்டு;
எழுந்தருளினார் - அன்பரை உடன் கொண்டெழுந்தருளினர்.
 
     (வி-ரை) அந்நிலையே - உயிர்ச்சார்புகளாகிய அனைத்தையும் அறுத்தெறிந்த
அந்நிலையில் அப்போதே.
 
     வெளியே - வெளிப்பட்டு; முன்னரும் அந்நிகழ்ச்சிகளின் உடனாய் மறைந்து
தாமிருந்தனர். இப்போது வெளிப்பட்டனர் என்க.
 
     உன்னுடைய....அணைய - பொன்னுலகு - தேவருலகு; மேலுலகம் - போக
பூமிகள்; பொன்னுலகினும் மேல் உலகங்களிலும் என்க; புக்கு - அணைய - புகுந்து
பின்னர் வந்து சார; இவ்வாறு புகுதல் முன் கன்மங்க ளறும் பொருட்டென்க.
நாயனாரது வாளால் வெட்டப்பட்டுத் தீர்ந்தது சிவனாரை மறுத்ததும் சிவன்பொருள்
நுகர்ந்ததுமாகிய சிவாபராதங்களேயாம். அதற்குமுன் உள்ள பிற கன்மங்களும் தீர்ந்த
பின்னரே, சிவனுலகம் புகலாமாதலின் அவை தீரும் பொருட்டுவிண் முதலிய
உலகங்களிற் சேறல் வேண்டப்பட்டதென்க.
 
     உறுபாசம் உன்னுடைய கைவாளால் அறுத்த - கிளை - அணைய என்க.
அறுத்த - அறுக்கப்பட்ட; செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது; உறுபாசம் -
ஆனை மறுத்ததனால் உற்ற பாவம்; அறுத்த கிளை - அறுத்ததனால்
புனிதராகியமையின் எனக் காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஞதினார்;
இக்கிளைஞர், உயிர் நீத்து இறந்துபடாமைக் காக்க நேரும்போது செய்யத்தகுவன என்ற
உலகியல்