பக்கம் எண் :

பெரியபுராணம்445

அறம்பற்றிச் செயல் செய்தனராதலானும், “குற்றமறப் பின் கொடுப்போம்” (4138)
என்றதனால் சிவதிரவியங் கவரும் கருத்திலர் ஆதலானும், ஆணைமறுத்து உண்டதற்கு
உரியதண்டம் செய்யப்பட்டா ராதலானும் இவர்களும் முறையிற் கன்மானுவம் தீர்ந்த
பின் முத்தி பெற்றனர். புக்குப் - பின் அணைய என்க; “கலந்தணைவாய்” (37)
என்புழிப்போல; இங்கு, இவ்வாறன்றிப், பொன்னுலகின் மேலுலகம் என்றதற்கு
தேவருலகத்தின் மிக்கதாகிய சிவனுலகம் என்றும், கிளைஞர் பெற்றது உடலை விட்டுச்
சென்று சிவனுலகு புகும் விதேகமுத்தி என்றும், அவ்வாறன்றி நாயனார் பெற்றது
சதேக (உடலுடன் கூடிய) முத்தி என்றும் உரைப்பாருமுண்டு. சதேகமுத்தியாவது -
நம்பிகள், சேரமானார், கண்ணப்பர், ஆனாயர் முதலியோர் பெற்றது போல வருவது;
கிளை - கிளைஞர் - மரத்தின் கிளை போல்வார்; உவம வாகுபெயர்; அணைக
என்று
- என்றது அணை கென்று என வந்தது தொகுத்தல் விகாரம். இவர்களைச்
சிவன் அடியாருடன் பகையாய் முத்திபெற்றவர்களுள் வைத்து வகுத்தனர்
திருத்தொண்டர் புராண வரலாறுடையார்; இயற்பகை நாயனாரது கிளைஞர்போல.
நாயனாரது சொல்லையும் திருவாணையையும் மறுத்துச் செயல் செய்து தம் உயிர்
காத்துக் கொண்ட செயலையே பகைத்து என்று கொண்டனர்.
 
     இந்நிலை - இந்நின்ற நிலையே; தமது வளமெல்லாஞ் சிவன் திருவமுது
பெருக்குதற்காக்கியமையாற் பொருட் சார்பு நீங்கிய நிலையும், கிளைமுழுதுமற
வெறிந்தமையாலுடற்சார்பு உயிர்ச்சார்புக ணீங்கியமையும் பெறப்பட்டன; இவ்வாறு
சார்புகெட ஒழுகினமையால் மேல்வரும் வினைகணீங்கச் சாருநிலை பெற்றனரதலின்
இந்நிலையே நம்பால் அணைக - என்றருளினர்; இனி இவர் இவ்வுலகிற் றங்குதற்குக்
காரணமில்லை என்பதாம்.
 
     ஆர் உயிர் ஆய் - சித்துப் பொருள்களாகிய உயிர்கள் தோறும்
நிறைந்தவனாகியும்; ஆர்தல் - நிறைதல்; கிளைமுதல் தடிந்த உம் வேற்றுமைத்
தொகை; முதல் - வினைமுதல், வேர்; தடிந்த - வெட்டி வீழ்த்திய; குறிப்புப் பொருள்;
“மாமுதல்தடிந்த” (முருகு); தொனி என்பர்; தாள் அடைந்து - தியானித்து;
அடைந்ததனால்; ஞானமூட்டிச் செந்நெறி நிற்பித்தலின் அத்தனாய் என்றும், ஊட்டி
வளர்த்தலின் அன்னையாய் என்றும், உயிர்க்குயிராதலின் ஆருயிராய் என்றும்
அழியாத மீளா நிலை தருதலின் அமிர்தாகி என்றும் கூறினார் என்பர்.          11
 
4145.    அத்தனா யன்னையா யாருயிரா யமிர்தாகி
முத்தனா முதல்வன்றா ளடைந்துகிளை முதறடிந்த
கொத்தலர்தார்க் கோட்புலியா ரடிவணங்கிக் கூட்டத்திற்
பத்தராய்ப் பணிவார்தம் பரிசினையாம் பகருவாம்.                      12
 
     (இ-ள்) அத்தனாய்.....முத்தனாம் - தந்தையும் தாயும் ஆருயிரும் அமிர்தம் ஆகி
முத்தனாகிய; முதல்வன்தாள்......வணங்கி - இறைவரது திருவடியினை
உட்கொண்டதனால் சுற்றத்தின் பந்தத்தினை வேரறத்தடிந்த கொத்தாகிய
அலர்களைக்கொண்ட மாலையினை அணிந்த கோட்புலி நாயனாரது திருவடியை
வணங்கி; கூட்டத்தில்.....பகருவாம் - கூட்டத்தவர்களாகிய அடியார்களுள்ளே பத்தராய்ப்
பணிவார் களதுதன்மையினைச் சொல்வோம்.
 
     (வி-ரை) அத்தனாய்....முத்தனாம் முதல்வன் - ஆய் - ஆக்கச் சொற்கள்
அதுவாந்தன்மை கொண்டிருத்தற் குறிப்புத்தருவன. எண்ணும்மைகள் விரித்