துரைத்துக்கொள்க; அத்தன் முதலிய தன்மைகளை உடையனாயினும் அவற்றுட்படாது வேறு முத்தனுமாவன் என்க. முத்தன் - இவற்றுட் கட்டுப்படாது நீங்கியவன்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். |
அடைந்து கிளைமுதல் தடிந்த - அடைந்து - அடைந்தமையாலே; இறைவரே அத்தன் முதலிய எல்லாமாவார்; ஏனையோராகிய உலக பாசத்தவர் அவ்வாறாகார் என்ற துணிவு பெற்றவராதலின் அவர்களை வேரறத் தடிந்தார் என்பதாம்; முதல் - வேர்; “நம்பொருட்டா லீன்ற தாதை விழவெறிந்தாய்; அடுத்த தாதை யினியுனக்கு நாம்” (1259) என்ற சண்டீச நாயனார் சரிதம் காண்க. இஃது இந்நாயனாரின் சரித சாரமாகிய முடிபு. |
கூட்டத்தில் - திருக்கூட்டத்தவர்களாகிய தொகையடியார்களுள்ளே; பரிசு - தன்மை; திருக்கூட்டத்தவர்களைப்பற்றிப் பண்பு மட்டிற் போற்றலாம் தகைமைத்து அன்றி, வரலாறுகள் பேசுதற்கு இயைபின்றாதலின் பரிசு என்றார்; இவ்வாறாதலின், “பொய்யடிமை யில்லாத புலவர் கூட்டத்”தைப்பற்றி, அவர்களுள் வகைநூலிற் குறித்த கபிலர் பரணர் நக்கீரரின் வரலாறுகள் இவ்விரிநூலுட் காணவில்லை என்றும், அவர் திருவாவூரடிகளாவார் என்றும், பலவாறு நவீன ஆராய்ச்சியாள் கிளப்பிய வாதங்களுக்கு ஈண்டு இடமின்மை தெரிந்து கொள்க. 12 |
_ _ _ _ _ உ சிவமயம் |
சுந்தரமூர்த்தி நாயனார் துதி |
_ _ _ _ _ |
தொகை |
| “ஆரூர னாரூரி லம்மானுக் காளே-” | |
- திருத்தொண்டத்தொகை - (9) |
வகை |
| தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபாற் புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன்றன் மிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளாலிவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தானாவ லூரரசே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (69) |
விரி |
4146. | மேவரிய பெருந்தவம்யான் முன்புவிளைத் தனவென்னோ? யாவதுமோர் பொருளல்லா வென்மனத்து மன்றிவே நாவலர்கா வலர்பெருகு நதிகிழிய வழிநடந்த சேவடிப்போ தெப்போதுஞ் சென்னியிலு மலர்ந்தனவால். 13 |
தொகை:- முன் உரைத்தபடி உரைக்க. |