பக்கம் எண் :

பெரியபுராணம்449

நம்முலகம் அடைய, நீ இந்நிலையே நம்முடன் அணைக என்று அருளி
எழுந்தருளினர்.
 
     குறிப்பு :- இந்நாயனாரது நம்பிகள் சார்புபற்றிய வரலாறு முன் ஏயர்கோன்
கலிக்காமனார் புராணத்து உரைக்கப்பட்டது.
 
     கற்பனை :- (1) தாம் தாம் செய்தொழிற் பெருஞ்சிறப்பின் வந்த வளமெல்லாம்
சிவன்திருவமுதின் படி பெருகச் செய்தல் சிவன்றிருப்பணியாகிய பெருஞ்சிவ தருமமாம்.
 
     (2) சிவனது திருவமுதுபடிக்குரிய நெல்லினை எவ்வகையாலேனும்
எக்காலத்திலேனும் அழித்தலும், கவர்தலும், தாமுண்ண நினைத்தலும் பெரும்பாவமும்
சிவாபராதமுமாம்.
 
     (3) சிவன் திரு ஆணையாகிய “திருவிரையாக்கலி”யின் வரம்பை மறுத்தல்
பெரும் சிவாபராதமாம்; அதற்குக் கொலைத்தண்டமே விதி.
 
     (4) உணவின்றி இறக்க நேரிட்டாலும், சிவனமுதுபடியினைப் பின்
கொடுப்போமென்றாகிலும் உண்டு உயிர் பிழைத்தலும் சிவாபராதமாம்.
 
     (5) சிவாபராதத்திற்கு உரிய வினைத்தீர்வாகிய தண்டமியற்றுதலில் தந்தை, தாய்,
மனைவி, மகவு, குழவி என்று உடற்சார்பு பற்றிய பாகுபாடுகளைக் கருதுதற்கு
இயைபின்று.
 
     (6) சிவச்சார்பு ஒன்றினையே பற்றி உடற்சார்புத் தொடக்குகளை அறுத்த
அந்நிலையே சிவன் வெளிப்பட்டுத் தம் கழற் சார்பு தந்தளிப்பர்.
 
     (7) சிவனே, ஒருவற்கு உற்ற நித்தமாகிய அத்தன் அன்னை முதலிய எல்லாச்
சார்புகளும் ஆவன்.
 
     தலவிசேடம்: திருநாட்டியத்தான்குடி:- முன்னர் உரைத்தது கடைப் பிடிக்க.
 

57. கோட்புலிநாயனார் புராணம் முற்றும்
 

10-கடல் சூழ்ந்த சருக்கம் முற்றிற்று