உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
58. பத்தராய்ப்பணிவார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத்தொகை - (9) |
வகை |
| அரசினை யாரூ ரமரர் பிரானை யடிபணிந்திட் டுரைசெய்த வாய்தடு மாறி யுரோம புளகம்வந்து கரசர ணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி சொரிதரு மங்கத்தி னோர்பத்த ரென்று தொகுத்தவரே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (70) |
விரி |
4147. | ஈசருக்கே யன்பானார் யாவரையுந் தாங்கண்டாற் கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழவுற் றாசையினா லாவின்பின் கன்றணைந்தாற் போலணைந்து பேசுவன பணிந்தமொழி யினியனவே பேசுவார். 1 |
பத்தராய்ப்பணிவார் சருக்கம் :- இனி, நிறுத்தமுறையானே, ஆசிரியர், திருத்தொண்டத் தொகையுள் பத்தாவதாகத் திருக்கூட்டத்துட் “பத்தராய்ப் பணிவார்” என்று தொடங்கும் பாட்டினுள் உள்ள ஏழு தன்மைப்பட்ட தொகையடியார்களது பண்புகூறுகின்றார். தொகையடியார்களாதலின் வரலாறு பற்றிப் பேசுதற்கியைபில்லை. |
புராணம் :- முன் உரைத்தவாறுரைக்க. |
தொகை :- முன்கூறியாங்குக் கூறுக. |
எல்லார்க்கும் என்ற முற்றும்மையினால் எக்காலத்தும் எவ்விடத்தும் என்று கொள்க. |
வகை :- அரசினை....பணிந்திட்டு - அரசரைத், திருவாரூரில் எழுந்தருளிய தேவர்களது பெருமானைத் திருவடி வணங்கி; உரை....வந்து - கூறித் துதித்த வாக்குத் தழுதழுத்து மயிர்க் கூச்செறிந்து; கர....கம்பித்து - கைகால் முதலிய உறுப்புக்கள் நடுங்கி; கண்ணருவி...சொரிதரும் - கண்களினின்றும் அருவிபோலக் கண்ணீர் சொரிகின்ற; அங்கத்தினோர் - இவ்வாறு கூறும் தன்மைபெற்ற அங்கங்களையுடையவர்கள்; பத்தரென்று தொகுத்தவரே - பத்தராய்ப்பணிவார்கள் என்று தொகுக்கப்பட்டவர்கள். |