பலரும் காணும்படி பயன் பெறுவார்கள்; மேவரிய...மேலானார் - பொருந்துதற்கரிதாகிய அன்பின் றிறத்தாலே மேம்பாடுடையவர்களுக் கெல்லாம் மேம்பாடுடையவர்களாய் விளங்குவார்கள். |
(வி-ரை) தாவரிய - கெடுதலில்லாத; தா - கேடு; தாவு - குறைதல்; சம்பு - சுகத்துக்கிருப்பிடமானவர். |
அர்ச்சிக்குபடி - பூசிக்கும் படியினை; படி - படியை; பண்பினை. இரண்டனுருபு விரிக்க. |
உவந்து - பயன்பெறுவார் என்று கூட்டுக. |
பாவனையால் - நோக்கினால் - பூசனையை உவந்து நோக்கும் இப்பத்தர்களை அவ்வாறு பூசிப்பவர்கள் சத்பாவனை செய்து நன்னோக்கம் செய்தலால்; பாவனை - நோக்கம் - இவர்கள் நன்மைபெறுக என்ற எண்ணத்துடன் செய்வன. |
பலர்காண - “பல்லோருங் காணவென்றன் பசுபாச மறுத்தானை” (திருவா). |
பாவனையால் நோக்கினால் - முன்கூறியவாறன்றி, இதற்கு, இப்பத்தர்கள் அவர்களை சிவமாகப் பாவிப்பதனாலும் அவ்வாறு நோக்குதலினாலும் என்றுரைத்தனர் முன் உரைகாரர். |
மேலவர்க்கு மேலானார் - பிற மேன்மைகள் படைத்த எவர்க்கும் இவரே மேல் என்று கூறும்படி என்க. 2 |
4149. | அங்கணனை அடியாரை யாராத காதலினாற் பொருங்கிவரு முவகையுடன் றாம்விரும்பிப் பூசிப்பார் பங்கயமா மலர்மேலான் பாம்பணையா னென்றிவர்கள் தங்களுக்குஞ் சார்வரிய சரண்சாருந் தவமுடையார். 3 |
(இ-ள்) அங்கணணை....பூசிப்பார் - இறைவரையும் அடியார்களையும் ஆராமையுடைய பெருவிப்பத்தினாலே மேன்மேலும் பொங்கி வருகின்ற மகிழ்ச்சியுடனே விரும்பிப் பூசிப்பார்கள்; பங்கயம்.....தவமுடையார் - தாமரைப் பூவின்மேல் இருக்கும் பிரமதேவனும் பாம்பணையின் மேலிருக்கும் விட்டுணுமூர்த்தியும் என்ற இவர்களுக்கும் சார்தற்கரிய திருவடிகளைச் சாரும் தவத்தினை உடையவர்கள். |
(வி-ரை) அங்கணனை அடியாரை - மலர்மேலான் - அணையான் - எண்ணும்மைகள் தொக்கன. |
தவமுடையார் - முன்னைத் தவமுடையாரே பத்தர்களாவார்கள்; சார்பு - “சார்புணர்ந்து” (குறள்) |
தங்களுக்கும் - உம்மை உயர்வு சிறப்பு; சார்தல் - அடைதல். |
பத்தராய் - என்ற தொகை நூலுக்கு இறைவர்பாலும் அடியார்பாலும் ஒன்று போலவே பத்திசெய்வது என்று உரை விரிப்பது இத்திருப்பாட்டு. 3 |
4150. | “யாதானு மிவ்வுடம்பாற் செய்வினைக ளேறுயர்த்தார் பாதார விந்தத்தின் பாலாக” வெனும்பரிவாற் காதார்வெண் குழையவர்க்காம் பணிசெய்வார் கருக்குழியிற் போதார்க ளவர்புகழ்க்குப் புவனமெலாம் போதாவால். 4 |
(இ-ள்) யாதானும்......எனும் பரிவால் - இந்த உடம்பினாற் செய்யும் செயல்கள் எவையேயாயினும் அவையெல்லாம் இடபத்தினை உயர்த்த பெருமானது |