பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்456

     (இ-ள்) சங்கரனுக்கு.....பயன்றுய்ப்பார் - சிவபெருமானுக்கே ஆளாகிய தவத்தினை
மேற்கொண்டு உலகு விளக்கித் தாம் அதனால் குற்றமறப் பயன் பெறுவர்; படிவிளக்கும்
பெருமையினார் - உலகினை விளங்கச் செய்யும் பெருமையினை உடையவர்கள்;
அங்கணனை...போற்றுவார் - அங்கணராகிய சிவபெருமானைத் திருவாரூரினை ஆளும்
இறைவரைத் திருவடிகளில் வணங்கி மேன்மேல் எழுகின்ற சித்தத்துடனே பத்தராய்ப்
போற்றுபவர்கள்.
 
     (வி-ரை) துய்ப்பாரும் பெருமையினாரு மாவார்கள் பத்தராய்ப் பணிவார்கள்
என்று இயைக்க; பெயர்ப்பயனிலை.
 
     தவம்காட்டி - தவம் - சிவவேடமும் சிவபூசையும்; காட்டுதல் -
இவையுடைமையினால் உள்ளே நிகழும் அன்பினை அறியச் செய்தல்.
 
     தாம் - தாமும் என எச்ச உம்மை விரிக்க; உலகறியவைத்த
பயன்றருதலேயன்றித் தாமும் அத்தவத்தால் வரும்பயனை அனுபவிப்பர். உலகறியத்
தவவேடம் பூணலேயன்றிக் தாம் அதன் பயன் துய்யாதாரும் உளராதலின்
அவரினின்றும் வேறுபிரித்துணரத் தாமும் அதனாற் பயன்றுய்ப்பார் என்றார்;
முத்தநாதன், அதிசூரன் முதலாகவந்த தருதவவேடத்தாரையும். வயிற்றுப்பிழைப்புக்காகத்
தாங்கும் தவவேடத்தாரையும் நீக்குதலின் பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; பங்கமற -
என்ற குறிப்புமது. பயன் - சாதனமுறையாலே தவத்தால் வரும் பயன்.
 
     படி - உலகு; உலகருக்கு; இடவாகு பெயர்; படிவிளக்கும் - உலகை விளங்கச்
செய்யும்; விளக்குதல் - எடுத்துக்காட்டாக நிற்றலால் அறிவுறுத்துதல்; நடந்து (ஒழுகிக்)
காட்டுதல்; படி - இதன்படி என்ற மேற்கோள்நிலை (Example - உதாரணம்)
என்றுரைக்கவும் நின்றது; பத்தர் குணங்கள் எட்டின் நிலை.
 
     அங்கணனைத் திருவாரூ ராள்வானை - “அரசினையாரூ ரமரர் பிரானை
அடிபணிந்திட்டு” (திருவந் - 70) என்ற வகைநூற் கருத்தினை விரித்தவாறு.
 
     படிவிளக்கும் பெருமையினார் “உரை செய்த....அங்கத்தினோர்” (திருவந். 70)
என்ற வகைநூற்கருத்தினைக் காட்டியவாறு.
     பொங்கி எழும் சித்தம் - மேன்மேல் அன்புபொங்கி எழும் உறைப்பாகிய
சித்தம்.
 
     பயன்றுய்யார் என்ற பாடம் தவறு.                                8
 
     பத்தராய்ப்பணிவார் புராணம் :- பண்பு - அடியார்களைக் கண்டாற்
பசுவின்பின் கன்று போல அணைகுவர்; சிவபூசை செய்வோரைக் கண்டால் உவந்து
பயன்பெறுகுவர்; அடியார்களையும் அரனையும் வழிபடுவர்; தாம் செய்யும்
எத்தொழிலும் சிவனுக்காவன வென்றே செய்குவர்; சிவனடியார் கதையினைவிரும்பிக்
கேட்பர்; எப்போதும் சிவனை மறவார்; உலகு விளங்கத் தவம் காட்டிப் பயன்பெறுவர்;
பதிதராய் பணியும் படியினை உலகில் விளக்கம் செய்குவர்; அவரே சித்தம் பொங்கிய
எழுச்சியுடன் பத்தராய்ப் பணிவார்கள்.
 
     கற்பனை :- (1) ஆசையொடும் அரனை வழிபடுதலும் அடியாரை அடைந்து
வழிபடுதலும் பத்திச்செயல்கள்.
 
     (2) உடம்பாற் செய்வினைகள் யாவும் சிவன்பாலே யாகுக என்ற சித்தத்துடன்
எல்லாத் தொழில்களும் செய்தல் வீடுபேற்றுக்குரிய சிறந்த சாதனம்.
 
     (3) சிவனடியார் சரிதங்களை விரும்பிக்கேட்பது பத்தியின் தன்மைகளுட் சிறந்தது
 
     (4) எந்த அவத்தையினின்றாலும் சிவனை மறத்தலாகாது.
 
     (5) தவத்தை தாம் மேற்கொண்டு காட்டித் தாமும் பயன்றுய்த்தலும் அதனால்
உலகை விளக்குதலும் பத்தரின் பண்பு.
 

58. பத்தராய்ப்பணிவார் புராணம் முற்றும்