உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
59. பரமனையேபாடுவார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (10) |
வகை |
| “தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த வியலிசை யவ்வகை யாலவ்விண் டோயுநெற்றி வகுத்த மதிற்றில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கண்மே லுகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்ப ருத்தமரே ” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (71) |
விரி |
4155. | புரமூன்றுஞ் செற்ற னைப் பூணாக மணிந்தானை யுரனில்வரு மொருபொருளை யுலகனைத்து மானானைக் கரணங்கள் காணா மற் கண்ணார்ந்து நிறைந்தானைப் பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம். 1 |
புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது பத்தராய்ப்பணிவார் சருக்கத்துள், இரண்டாவது, பரமனையே பாடுவாரது புராணம் கூறத் தொடங்குகின்றார். பரமனையே பாடுவாரது பண்புகூறும் பகுதி. |
தொகை :- இதன் பொழிப்பு முன் உரைத்தவாறு உரைத்துக்கொள்க; பரமனையே - ஏகாரம் பிரிநிலை; பாடுதல் - ஈண்டு இயலிசைப் பாட்டினைக்குறித்தது; இசை - கீதம் என்பன ஒரு பொருள்; முன்னர்ப் பொய்யடிமையில்லாத புலவர்கள் பாடியன வேறு; அவை இயற்றமிழ்ப் பாட்டுக்கள்; இவை கீதங்கள்; இசையுடன்பாடும் இயற்பாட்டுக்கள். “சொயவலகீதம்” “கீதத்தை மிகப்பாடு மடியார்கள்”. |
வகை :- தொகுத்த...தோன்றியதே - சிறப்பாகத் தொகுக்கப்பட்ட வடமொழியும், தென்மொழியும் என்னும் இவற்றுள் எது தங்களுக்குக் கைவந்ததோ அதனில்; மிகுத்த....வகையால் - மேலான இயலும் இசையும் என்ற இருவகையாலும்; விண்தோயும்...பாதங்கள் மேல் - ஆகாயத்தை அளாவும் முடியின் அமைதியுடைய மதில்சூழ்ந்த தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் இறைவரது மலர்போன்ற |