பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்458

பாதங்களின்மேல்; உகுத்த.....உத்தமர் - செலுத்திய மனத்தினுடனே பாடவல்லோர்கள்
உத்தமர்களென்று கூறுவர்.
    
     தொகுத்த - எல்லா மொழிகளினுஞ் சிறந்தன என்று பெரியோர்களாகிய
முந்தையோர் தொகை செய்த மொழிகள் வடமொழியும் தென்மொழியு
மெனஇரண்டேயாம் என்றபடி; யாதொன்று - இரண்டில் ஒன்று; அவ்வகையால் -
அமைந்த அவ்வளவினால்; “கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்
வகையால்” (பிள். தேவா. வைகாவில்:1.); நெற்றி - உச்சி; உகுத்தல் - முழுதும்
வைத்தல்.
 
     விரி:- 4155. (இ-ள்) வெளிப்படை. அசுரர்களது மூன்று புரங்களையும்
எரித்தவரும், பூணாக நாகங்களை யணிந்தவரும், ஞானம் முதிர்ந்த இடத்து
வெளிப்படும் ஒப்பற்ற பொருளானவரும், எல்லாவுலகங்களையும் தமது மாயாசத்தியால்
உளவாக்கியவரும், கருவிகரணங்களாற் காணப்படாதவராயினும் அவற்றுள் நிறைந்து
நின்று காட்டுபவரும் ஆகிய பரமனையே பாடுவார்களது பெருமையினைப்பாடுவோம்.
 
     (வி-ரை) உரன் - ஞானம்; ஈண்டுப்பதிஞானம் என்ற பொருளில் வந்தது.
“உரனென்னுந் தோட்டியான்” (குறள்); உரனில் வரும் - பதிஞானத்தாலறியப்படுபவன்;
“உறவு கோனட் டுணர்வு கயிற்றினான், முறுக வாங்கிக் கடையமுன்னிற்குமே” (தேவா).
 
     உலகனைத்துமானான் - உலகமெங்கும் நிறைந்தவன் என்பதுமாம்; ஆனான் -
ஆக்கினான். “அவையே தானேயாய்” (போதம் - 2).
 
     காணாமல் - நிறைந்தான் - காணமுடியாதபடி அங்கு நிறைந்து நின்று
காட்டுபவன்; காணாமல் - பசுஞானத்தால் அறியப்படாதவன்.
 
     செற்றானை - முதலிய ஐந்தினையும் என உம்மைவிரித்து, இவ்வைந்து
குணங்களையுமுடைய பரமனையே என்க. ஏகாரம் பிரிநிலை.
 
     இப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை.
 
     கண்ணாந்து நின்றானை - என்பதும் பாடம்.                          1
 
4156. தென்றமிழும் வடகலையுந் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடு
முள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.                         2
 
     (இ-ள்) தென்றமிழும்.....தேசிகமும் - தென்றமிழும் வட மொழியும் பிறதேச
மொழிகளும் யாதொன்று அடுத்ததாகக் கைவரினும்; பேசுவன...பொருளாக -
திருவம்பலத்தில் நடம் புரியும் வள்ளலாகிய ஸ்ரீ நடேசப் பெருமானையே அவற்றுள்
பேசப்படும் உயர்ந்த குறிக்கோளாக, உட்கொண்டு; ஒன்றிய......பாடுவார் - ஒன்றாகப்
பொருந்திய மெய்யுணர்வினோடும் மனமுருகிப் பாடுபவர்களே; பன்றியுடன்...பாடுவார்-
பன்றியாகிய விட்டுணுமூர்த்தி யுடனே அன்னப்பறவையாகிய பிரமதேவனும்
அறியமுடியாத பரமனையே பாடுவார் எனப்படுவார்கள்.                       2
 
     (வி-ரை) பொருளாக....உள்ளுருகிப் பாடுவார் - பரமனையே பாடுவாராவர்
- என்று முடிக்க; ஆவார் என ஆக்கச்சொல் வருவிக்க. பின்னுள்ள பாடுவார் என்ற
பெயர்ப்பயனிலைகொண்டு முடிந்த தென்றலுமாம்.