பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்460


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
    

60. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்”

     - திருத்தொண்டத் தொகை - (10)
 

வகை
 

உத்தமத் தானத் தறம்பொரு ளின்ப மொடியெறிந்து
வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி
மத்தம்வைத் தான்றிருப் பாத கமல மலரடிக்கீழ்ச்
சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (72)
 

விரி
 

4157.   காரணபங் கயமைந்தின் கடவுளர்தம் பதங்கடந்து
பூரணமெய்ப் பரஞ்சோதி பொலிந்திலங்கு நாதாந்தத்
தாரணையாற் சிவத்தடைந்த சித்தத்தார் தனிமன்றுள்
ஆரணகா ரணக்கூத்த ரடித்தொண்டின் வழியடைந்தார்.               1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையாளே, பதினொன்றாவது பத்தராய்ப் பணிவார்
சருக்கத்தில், மூன்றாவதாகச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் பண்பு கூறும் பகுதி.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க.
 
     சித்தம் - உள்ளம்; சிவன்பாலே - ஏகாரம் பிரிநிலை; ஏனை அதிகாரக்
கடவுளர்பாலன்றிச் சிவன்பாலே என்க. “கடவுளர்தம் பதங்கடந்து” (4157) என்பது
விரிநூல்; வைத்தல் - பொருத்துதல்; சித்தத்தைச் சிவன்பாலே வைத்தல் என்பது
சித்தத்துள்ளே சிவனை வைத்தலும் சிவனையன்றி வேறெவரையும் வைக்காமையுமாம்;
“பொது நீக்கித் தனைநினைய வல்லோர்க்கு” (தேவா).
 
     வகை :- உத்தமத்தானத்து...எறிந்து - உத்தமமாகிய சிவபுண்ணிய மேலீட்டினாலே
அறமும், பொருளும், இன்பமுமென்னும் காட்டினை ஒடிபோலாக்கி யெறிந்து;
வித்தகத்தானத்து ஒரு வழிக்கொண்டு இதயம் முதலியனவாகிய ஐந்து ஞான